அரியலூர் மாவட்டம், மணக்காலில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மணக்கால், குழுமூர் மற்றும் வெட்டியார்வெட்டு கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு பல்நோக்கு மையக் கட்டடங்களைத் திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அவர் மேலும் பேசியது:
திமுக தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக 5-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் ஆதிதிராவிடர் நல மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.
ஆதிதிராவிடர் நலத் துறை மாணவர்களுக்காக அடிப்படைக் கட்டமைப்பு, உள் கட்டமைப்பு வசதிகளுக்காக | 50 கோடியை திமுக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆதிதிராவிடர் மாணவர்களும் தனியார் பள்ளிகளிலும் படிக்கும் வகையில், மாவட்டத்துக்கு 10 பேர் வீதம் அவர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர்ந்து படிக்க ஏதுவாக, பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவர்களுக்குத் தேவையான நிதியை அரசு வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதற்காக மட்டும் | 3.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தனியார் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் ஆதிதிராவிட மாணவர்களுக்கும் அரசு நிதியுதவி செய்கிறது. பிளஸ் 2 வரை அவர்களுக்கு அரசே தேவையான உதவியை செய்து வருகிறது. கடந்தாண்டில் மட்டும் | 3.17 கோடி இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றார் அமைச்சர் தமிழரசி.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாளை. து. அமரமூர்த்தி, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

0 comments:
Post a Comment