Pages

Thursday, December 30, 2010

சுண்டக்குடி அரசுப் பள்ளி மாணவிகள் 71 பேருக்கு இலவச சைக்கிள் அளிப்பு

சுண்டக்குடி அரசுப் பள்ளி மாணவிகள் 71 பேருக்கு இலவச சைக்கிள் அளிப்பு

அரியலூர், டிச. 29: அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 71 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் அருள்ராஜ் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் சுரேஷ், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விழாவில் அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி பங்கேற்று, 71 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசியது:

மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, அதற்காக நிதியை ஒதுக்கியுள்ளது.

கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், கல்விக்காக மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளைப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றார் அமரமூர்த்தி.

விழாவில் குருவாடி ஊராட்சித் தலைவர் வீர. ரவி, சிதம்பரம் மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப. சுந்தரசோழன், அரியலூர் சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன் பொதுச் செயலர் தேவர், கோபி உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.

Thursday, December 23, 2010

அரியலூரில் புதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கம்

அரியலூர்: அரியலூரில் இரண்டு புதிய வழித்தடங்களுக்கான பஸ் போக்குவரத்து துவக்கவிழா நடந்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு, அரியலூரிலிருந்து திருவையாறு வரை நான்குமுறை சென்று வரும் வகையிலான, புதிய வழித்தட டவுன்பஸ் மற்றும் விக்கிரமங்கலம் வழிகாக கொலையனூர் வரை சென்றுவரும் டவுன்பஸ் உள்ளிட்ட புதிய வழித்தட டவுன்பஸ் போக்குவரத்து துவக்கவிழாவுக்கு, அரசு போக்குவரத்து கழகத்தின் பெரம்பலூர் கோட்ட மேலாளர் சங்கர் தலைமை வகித்தார். அரியலூர் கிளை மேலாளர் ராமநாதன் வரவேற்றார்.

புதிய வழித்தட டவுன் பஸ் போக்குவரத்தை, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் காங்கிரஸ் நகர தலைவர் ஸ்ரீதர், அரியலூர் நகராட்சி துணை தலைவர் சுப்ரமணியன், திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், பஞ்சாயத்து தலைவர்கள் சாத்தமங்கலம் ராமையன், பெரியதிருக்கோணம் செல்வி இளங்கோவன், குருவாடி வீரரவி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பழனி, சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

அரியலூரில் டிச. 26-ல் மாநில அளவிலான ஹாக்கி

அரியலூர், டிச. 21: அரியலூரில் பசுபதி நினைவு ஹாக்கி கழகம், டாக்டர் எம். அப்துல் சாதிக் நினைவுக் கழகம் ஆகியவை சார்பில் நடைபெறும் மாநில அளவிலான ஹாக்கி போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஹாக்கி கழகத்தின் தலைவரும், பசுபதி நினைவு ஹாக்கி கழகத்தின் தலைவருமான எம். ஞானமூர்த்தி திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

அரியலூர் உயர்நிலைப் பள்ளியில் உடல் கல்வி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்த  அருணாசலம் (எ) பசுபதி நினைவாக கடந்த 1974 ஆம் ஆண்டு அவரது பெயரைக்  கொண்டு ஹாக்கி கழகம் தொடங்கப்பட்டது.
1994 முதல் 2001 ஆம் ஆண்டு வரை பசுபதி நினைவு ஹாக்கி கழகம் சார்பில், மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சில ஆண்டுகள் தொடர்ந்து போட்டிகளை நடத்த முடியவில்லை என்றாலும்,  தற்போது 9-வது ஆண்டாக மாநில அளவிலான ஹாக்கி போட்டியை நிகழாண்டு  நடத்துகிறோம்.  டிசம்பர் 26 முதல் 30 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெறும்.

இந்தப் போட்டியில் தெற்கு ரயில்வே அணி, தமிழக காவல் துறை அணி, மதுரை திருநகர் ஸ்போர்ட்ஸ் கிளப், பாளையங்கோட்டை ஜோதி ஹாக்கி கிளப், சென்னையிலுள்ள இந்திய உணவுக் கழக அணி, ஐ.சி.எப். அணி, மதுரை ரிசர்வ் லைன் அணி, உடுமலைப்பேட்டை அணி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, வாடிப்பட்டி எவர்கிரீன் ஹாக்கி கிளப், இந்திய விளையாட்டு ஆணைய அணி, சென்னை பாரத ஸ்டேட் வங்கி அணி, சென்னை ஏ.ஜி.ஓ.எஸ். அணி மற்றும் அரியலூர் பசுபதி நினைவு ஹாக்கி கழக அணி என மொத்தம் 16 அணிகள்  பங்கேற்கின்றன.

 டிசம்பர் 26 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நஜ்முல் ஹோதா போட்டியைத் தொடக்கிவைக்கிறார். தினமும் 4 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இறுதிப் போட்டி டிசம்பர் 30 ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. மழை பெய்யும் பட்சத்தில் போட்டிகளை மாற்று இடத்தில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளையும்  செய்துள்ளோம். மேலும், வெளியூர்களிலிருந்து வரும் வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


போட்டி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், பாளை து. அமரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்றார் ஞானமூர்த்தி.

பேட்டியின் போது, போட்டிச் செயலர் வி. யோகநாதன், ஒருங்கிணைப்பாளர் என். பாரதிதாசன், ஹாக்கி கழகச் செயலர் டி. குணசேகரன், ஹாக்கிப் பயிற்சியாளர் என். லெனின்,எஸ். ஜபருல்லா, அரியலூர் மாவட்ட கூடைப்பந்து கழகச் செயலர் சின்னப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

Wednesday, December 15, 2010

Minister assures assistance from Centre for rain-affected farmers

Minister assures assistance from Centre for rain-affected farmers

 

Sharing the concern:Farmers showing damaged paddy crop to G.K.Vasan, Union Minister for Shipping, at Vilangudi village near Thiruvaiyaru on Friday.

 

THANJAVUR: The Central government will extend its assistance, once it receives the rain damage assessment report from the State government, said Union Minister for Shipping G.K.Vasan, at Vilankudi village near Thiruvaiyaru on Friday.

 

He was inspecting the inundated paddy fields at the village. Later, he told reporters that the damage was extensive and paddy crops on nearly four lakh acres have been submerged in the Cauvery delta districts of Thanjavur, Tiruvarur and Nagapattinam. The rain was torrential in coastal districts and infrastructure facilities such as roads have been badly hit. Loss of human life and those of cattle have also been reported.

 

It is for the Tamil Nadu government to provide immediate and necessary relief to the affected people. "In view of the alarming weather forecast by the meteorological department and as there is every likelihood of rain continuing, the State government should take all precautionary measures and rush relief to people," Mr.Vasan said. On the possibility of a central team visiting the State, the Minister said "The Central government's help would depend on the magnitude of the damage and if the State government wanted it."

 

Mr.Vasan said that he would inspect the rain damage in Ariyalur and Perambalur districts on his way to Chennai on Friday. The Minister was accompanied by G.Rangaswamy Moopanar and Suresh Moopanar, AICC members; Amaramurthy MLA; M.Ramkumar former MLA and Nanji Varadarajan, Thanjavur South district president of the party.

 

Thanks to : The Hindu

 

Sunday, December 5, 2010

கணக்கீடு அடிப்படையில் மத்திய அரசு உதவும்

தஞ்சாவூர்: திருவையாறு தியாகபிரம்ம மகோத்சவ சபை உதவி செயலாளர் பருத்திக்குடி மனோகரன் மனைவி இறந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன், மழை பாதித்த பகுதியை பார்வையிட்டார். தஞ்சை மாவட்டம் விளாங்குடி கிருஷ்ணதாஸ் என்பவர் வயலுக்குள் இறங்கி பயிர் சேதத்தை பார்வையிட்ட வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: பல மாவட்டங்களில், குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் விவசாயம், வீடு, குடிசை பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு லட்சம் ஏக்கர் பயிர் மூழ்கியுள்ளது. நெற்பயிர்கள் பல இடங்களில் நீரால் சூழப்பட்டுள்ளது. தொடர் மழையால் நீர் வடியாமல் உள்ளதால், பயிர்கள் அழுகும் சூழல் உள்ளது.

மேட்டூர் அணை, வீராணம் ஏரி போன்றவை நிரம்பியுள்ளன. தமிழக அரசு தொடர்ந்து நிவாரணம் வழங்கி வருகிறது. மழையால் இறந்தவர்கள், வீடு பாதிப்புக்கு பல நிலைகளில் இழப்பீடு, நிவாரணம் வழங்கப்படுகிறது. மழைநீர் முழுமையாக வடிந்ததும் நெற்பயிர் சேதம், சாலை, ஆறு, வீடு போன்ற குறித்து அரசு கணக்கெடுப்பு செய்யும் என நம்புகிறோம். மழை தொடர்ந்தால் அதை எதிர்கொள்ள அரசு திட்டமிட்டு செயல்பட வேண்டும். இன்றுள்ள நிலையை அரசு கவனித்து வருங்காலங்களில் இதுபோன்ற பாதிப்பை தடுக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

அரசு கணக்கீடு செய்யும் சேதத்தின் அடிப்படையில் மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும். காவிரி பிரச்னையில் மத்திய அரசு மக்களின் நிலையை பிரதிபலிக்கும் வகையில் செயல்படும். தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டியதை பெற்றுத்தர முயலும். தமிழக காங்கிரஸ், இங்குள்ள மக்களின் எண்ணத்தை மத்திய அரசிடமும், காங்கிரஸ் தலைவர்களிடமும் தொடர்ந்து கூறி வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை பெற்றுத்தருவார்கள். தஞ்சை - பெரம்பலூர் ரோடு தேசிய நெடுஞ்சாலையாக்கப்பட்டு, இதனை சீரமைக்க மத்திய அரசு 52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான டெண்டர் மாநில அரசு மூலம் விடப்பட்டபோது, இத்தொகையைவிட கூடுதலாக தொகையை தனியார் நிறுவனங்கள் எதிர்பார்த்ததால் மறுடெண்டர் விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி டில்லி வந்து, நானும் அவரும் சேர்ந்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் கமல்நாத்திடம் இப்பிரச்னை குறித்து பேசி, விரைவில் மறுடெண்டர் விட்டு பணியை துவங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இங்கிருந்து நான் சென்னை செல்லும் வழியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு செல்கிறேன். எங்கள் இயக்கத்தினர் ஆங்காங்கு இதற்காக காத்துள்ளனர்.<BR>இவ்வாறு அவர் கூறினார். விளாங்குடி கிருஷ்ணதாஸ் என்பவரது ஒரு வயலை மட்டும் பார்வையிட்ட மத்திய அமைச்சர் வாசன் பேட்டியளித்தார். முன்னதாக அவரது கார் ரோட்டின் குறுக்கே நிறுத்தப்பட்டதால், பேட்டி, பேட்டியை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு என 30 நிமிடங்களுக்கு மேல் முழுமையாக வாகனங்கள் இரு புறமும் நிறுத்தப்பட்டது.

தஞ்சை - பெரம்பலூர் ரோட்டில் இரு புறமும் நீண்டதூரத்துக்கு வாகனங்கள் நின்றது மக்களை எரிச்சல் அடையச் செய்தது.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ரெங்கசாமி மூப்பனார், சுரேஷ்மூப்பனார், எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., ராம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்

பள்ளி கூடுதல் கட்டடம் திறப்பு

பள்ளி கூடுதல் கட்டடம் திறப்பு

First Published : 29 Nov 2010 01:25:58 PM IST


அரியலூர், நவ. 28: திருமானூர் அடுத்த புதுப்பாளையம் ஆர்.சி. தூயமேரி பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டடம் அண்மையில் திறந்துவைக்கப்பட்டது.

   சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சம்  மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை குடந்தை ஆயர் அந்தோணிசாமி புனிதம்  செய்தார்.

   சட்டப்பேரவை உறுப்பினர் பாளை. து. அமரமூர்த்தி கட்டடங்களைத் திறந்துவைத்தார்.

  சகாயமாதா மருத்துவமனை பங்குத் தந்தை தங்கசாமி, புள்ளம்பாடி முதன்மை குரு  வின்சென்ட் பெரர், ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

  முன்னதாக, பள்ளித் தாளாளர் துரைராஜ் வரவேற்றார். தலைமையாசிரியர் மெரினாமேரி நன்றி கூறினார்

தஞ்சாவூர்- அரியலூர் இடையிலான சாலையை சீரமைக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் மனு

தஞ்சாவூர்- அரியலூர் இடையிலான சாலையை சீரமைக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் மனு

First Published : 05 Dec 2010 01:47:23 PM IST


அரியலூர், டிச. 4: மானாமதுரை - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் - அரியலூர் இடையிலான சாலையைச் சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசனிடம் அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி கோரிக்கை மனு அளித்தார்.

   தஞ்சை மாவட்டம், திருவையாறு மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் மழையால் சேதமடைந்த விவசாய நிலங்களை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு, விவரங்களைக் கேட்டறிந்தார்.

   அப்போது, அமைச்சரிடம் அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி அளித்த மனு:

   மானாமதுரை - பெரம்பலூர் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் தஞ்சாவூர் முதல் அரியலூர் வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

   வாகனங்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையேதான் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.    இந்தச் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணிகள் இதுவரை நடைபெறவில்லை.

   ஏற்கெனவே மோசமாக இருந்த சாலை அண்மையில் பெய்த மழையால் மேலும் மோசமடைந்துவிட்டது. எனவே, உடனடியாக சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அமரமூர்த்தி கூறியிருந்தார்.

   மனுவைப் பெற்றுக் கொண்ட பின்னர், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியது:

   மானாமதுரை - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சை - அரியலூர் இடையேயான சாலையைச் சீரமைக்க ரூ. 52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தப்புள்ளியும் விடப்பட்டது.

   ஆனால், இந்தப் பணியை மேற்கொள்ள தனியார் எடுத்துள்ள ஒப்பந்தப்புள்ளியில் பணிகள் மேற்கொண்டால், அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் இந்தப் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

   சாலையைச் சீரமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கமல்நாத்திடம் எடுத்துரைத்துள்ளோம். எனவே சாலை சீரமைக்கும் பணியில் முழு கவனம் செலுத்தி, விரைவில் பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜி.கே.வாசன்.

   அப்போது, காங்கிரஸ் பிரமுகர் ஜி.ஆர். மூப்பனார், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன், மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, அரியலூர் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருமானூர் பகுதிகளில் 277 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் அளிப்பு

திருமானூர் பகுதிகளில் 277 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் அளிப்பு

First Published : 05 Dec 2010 01:50:02 PM IST


அரியலூர், டிச. 4: அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற விழாக்களில் 277 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

    திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சிவானந்தம் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி விழாவில் பங்கேற்று, 92 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசியது:

  மாணவ, மாணவிகள் அரசு வழங்கும் உதவிகளைப் பயன்படுத்திக் கொண்டு சிறந்த முறையில் கல்வி கற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றார்.

 விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவித் தலைமை ஆசிரியை ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.

     திருமழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சைக்கிள் வழங்கும் விழாவுக்கு ஊராட்சித் தலைவர் கர்ணனும், கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முருகேசனும், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மருதபாண்டியனும் தலைமை வகித்தனர்.

இந்தப் பள்ளிகளில் தனித்தனியே நடைபெற்ற சைக்கிள்கள் வழங்கும் விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்  பாளை து. அமரமூர்த்தி பங்கேற்று சைக்கிள்களை வழங்கினார்.

 கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 23 மாணவிகளுக்கும், திருமழப்பாடி பள்ளியில் 65 மாணவ- மாணவிகளுக்கும், ஏலாக்குறிச்சி பள்ளியில் 97 மாணவ, மாணவிகளுக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

  இந்த விழாக்களில் திருமழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் நாகரீகம், கண்ணதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றன

Wednesday, December 1, 2010

Five soil testing centres planned

Five soil testing centres planned

Special Correspondent

ARIYALUR: Soil testing centres with farm laboratories would be set up in five primary agricultural cooperative societies (PACS) soon in Ariyalur district under the National Agricultural Development Programme (NADP), said Collector T.K.Ponnusamy, here on Friday.


Presiding over the 57 {+t} {+h} all India cooperative week celebrations here, the Collector said agriculture service centres had been started in the PACS at Vadaveekam, Kallathoor, Keezhakaavattankurichi, Ponparapi, Tirumazhapadi, Keezhapazhur, Ambapur and Udayarpalayam.


He said one soil testing centre would be set up in each panchayat union. The Collector said PACS had disbursed crop loan to the tune of Rs.29.66 crore to 10,643 farmers in the district during the current year till the end of last month and wanted the farmers to repay their loans promptly and avail of interest concession announced by the government. He said Rs.1.54 crore had been disbursed as medium term loan by the co-operative societies and revolving fund of Rs.3.53 crore to 311 women self help groups. Mr Ponnusamy said the PACS were providing jewel loan and added the district central co-operative bank had provided Rs.20 lakh each to weak PACS for disbursing jewel loans. He said there were 401 fair price shops and essential commodities were being distributed to 3,29,353 family card holders.


Palai D.Amaramurthy, S.S.Sivasankar and K.Rajendran, MLAs of Ariyalur, Andimadam and Jayamkondam respectively, Kodiyarasi Duraisamy, district panchayat chairman, R.Pichai, District Revenue Officer and R.Ramamurthy, Regional Joint Registrar of Co-operative Societies spoke

 


Friday, September 24, 2010

Multipurpose buildings, development works inaugurated

The State government accords priority for implementing various welfare schemes for the benefit of Adi Dravidar community people in the State, said A.Tamilarasi, Minister for Adi Dravidar Welfare, on Monday.

The Minister who inaugurated several multipurpose buildings and development works in the Manakkal, Kuzhumur and Vettiarvettu Adi Dravidar colonies in Manakkal panchayat in Ariyalur district, said that more than Rs.five crore had been spent for implementation of various welfare schemes and development works including construction of school buildings, basic amenities and other infrastructure facilities in the Adi Dravidar colonies.

Mrs Tamilarasi said that Chief Minister M.Karunanidhi took special steps and has sanctioned Rs.110 crore through NABARD for various development works in the Adi Dravidar colonies. The Minister said that the pass percentage in the Adi Dravidar schools in the State had crossed more than 80 per cent in the SSLC and Plus Two public examinations.

The Minister also distributed free house site pattas to seven beneficiaries and marriage grants of Rs.20,000 to 59 beneficiaries under Moovalur Ramamirtham Marriage Assistance Scheme.

Collector T.Abraham who presided over the function explained in detail the various development and welfare schemes being implemented in the district for the benefit of the Adi Dravidar community people. MLAs Palai.D.Amaramurthy (Ariyalur) and Rajkumar (Perambalur) and other dignitaries spoke.

Earlier, the Minister who inspected the Adi Dravidar students hostel at Government Arts College in Ariyalur advised the students to keep the hostel clean and tidy. She also instructed the officials to provide the facilities required by the students.

Friday, September 17, 2010

பனங்கூர் கிராமத்தில் பகுதிநேர ரேஷன்கடை திறப்பு விழா



அரியலூர்: அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி அருகே ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்துக்கு உட்பட்ட உள்ள பனங்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட பகுதிநேர ரேஷன்கடை திறப்பு விழா நடந்தது.ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்து தலைவர் சுப்ரமணியன் வரவேற்றார்.

அரியலூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ரேஷன்கடையை திறந்துவைத்து, அரியலூர் எம்.எல்.., பாளை அமரமூர்த்தி பேசியதாவது:இன்றைய காலகட்டத்தில் ரேஷன் பொருட்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முதலிடம் வகிப்பதாக உள்ளது. எனவே, அரசின் விதிகளை தளர்த்தி இந்த பனங்கூர் கிராமத்தில் பகுதி நேர ரேஷன்கடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.வாழைக்குழி, நானாங்கூர், நெருஞ்சிக்கோரை ஆகிய ஊர்களிலும் திருமானூர் காந்தி நகர் பகுதியிலும் பகுதி நேர ரேஷன்கடைகள் திறக்கப்படும்.

பனங்கூர் ரேஷன்கடையானது வாரம் ஒருநாள் வியாழக்கிழமையன்று இயங்கும். கூடுதல் பணியாளர் நியமிக்கப்பட்ட பிறகு, வாரம் இரண்டு நாள் இயங்க உத்தரவிடப்படும். பொதுமக்கள் இதை பயன்படுத்தி வளமாக வாழ வேண்டும்.

சுண்டக்குடி பகுதிக்கு அரியலூரிலிருந்து கூடுதல் பஸ்வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றம் தொடர, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சிதம்பரம் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப சுந்தரசோழன், கதிர்வேல் மைன்ஸ் கணேசன், ஆர்.., லெனின் சசிக்குமார், வி..., முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், பஞ்சாயத்து துணை தலைவர் குணசேகரன், காங்கிரஸ் வட்டார தலைவர் சௌந்தர்ராஜன், மதிவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஓட்டக்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Thursday, September 16, 2010

ஏலாக்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை: சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி

அரியலூர், ஆக. 26: அரியலூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி.

திருமானூரிலிருந்து செட்டிக்குழி வழியாக கோவிலூர், காமரசவல்லி வரையிலான புதிய பேருந்து வழித்தடத்தை, புதன்கிழமை செட்டிக்குழியில் கொடியசைத்துத் தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது:

அரியலூர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பேருந்து வசதி இல்லாத சிற்றூர்களை கண்டறிந்து, கடந்த 4 ஆண்டுகளில் படிப்படியாக அந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

செட்டிக்குழி கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து | 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை வசதி மேம்படுத்தப்பட்டு, தற்போது பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏலாக்குறிச்சியிலும், செந்துறை- அரியலூர் இடையே ஏதேனும் ஒரு ஊரிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்துத் தருமாறு மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த அரசிடமிருந்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார் அமரமூர்த்தி.

இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் எம். பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் ஆர். செல்வக்குமார், கிளை மேலாளர் எஸ். ராமநாதன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் மா. நடராஜன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் இரா. கென்னடி, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர். ரங்கராஜன், குருவாடி ஊராட்சித் தலைவர் வீர. ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சிஆதிதிராவிடர் நலத் துறைக்கு | 2,905 கோடி நிதி ஒதுக்கீடு

அரியலூர், செப்.13:    கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஆதி திராவிடர் நலத் துறைக்கு  | 2,905 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ஆ. தமிழரசி.


அரியலூர் மாவட்டம், மணக்காலில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மணக்கால், குழுமூர் மற்றும் வெட்டியார்வெட்டு கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு பல்நோக்கு மையக் கட்டடங்களைத் திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அவர் மேலும் பேசியது:
    
திமுக தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக 5-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் ஆதிதிராவிடர் நல மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.
    
ஆதிதிராவிடர் நலத் துறை மாணவர்களுக்காக அடிப்படைக் கட்டமைப்பு, உள் கட்டமைப்பு வசதிகளுக்காக | 50 கோடியை திமுக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆதிதிராவிடர் மாணவர்களும் தனியார் பள்ளிகளிலும் படிக்கும் வகையில், மாவட்டத்துக்கு 10 பேர் வீதம் அவர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர்ந்து படிக்க ஏதுவாக, பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவர்களுக்குத் தேவையான நிதியை அரசு வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதற்காக மட்டும் | 3.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தனியார் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் ஆதிதிராவிட மாணவர்களுக்கும் அரசு நிதியுதவி செய்கிறது. பிளஸ் 2 வரை அவர்களுக்கு அரசே தேவையான உதவியை செய்து வருகிறது. கடந்தாண்டில் மட்டும் | 3.17 கோடி இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றார் அமைச்சர் தமிழரசி.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாளை. து. அமரமூர்த்தி, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

Tuesday, August 31, 2010

அரியலூர் தொகுதியில் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் பணி நிறைவு

அரியலூர், ஆக. 30: அரியலூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 71 ஊராட்சிகளில் 60 ஆயிரம் பேருக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் து. அமரமூர்த்தி தெரிவித்தார்

அரியலூர் அருகேயுள்ள பார்ப்பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 434 பேருக்கு இலவச கலர் டிவிக்களை வழங்கி, சட்டப்பேரவை உறுப்பினர் பாளை. து. அமரமூர்த்தி பேசியது:

அரியலூர் தொகுதியைச் சேர்ந்த 71 கிராம ஊராட்சிகளில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அரியலூர் நகராட்சியில் மூன்று வார்டுகளுக்கு மட்டும் இன்னும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்&nbsp; வழங்கப்படாமல் உள்ளது. அங்கும் விரைவில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும் என்றார் அவர்

விழாவில் திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் மா. நடராஜன், துணைத் தலைவர் இரா. கென்னடி, வட்ட வழங்கல் அலுவலர் எம்.எஸ். தண்டாயுதபாணி ஆகியோர் பேசினர். 

இதில் ஊராட்சி உறுப்பினர்கள் க. முத்தையன், இரா. ஞானசேகரன், இரா. காமாட்சி, ந. சாமிதுரை, சி. பாஸ்கர் ஊராட்சி உதவியாளர் யா. பாக்கியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஊராட்சித் தலைவர் வீ. அன்னலட்சுமி வரவேற்றார். துணைத் தலைவர் எம். சுந்தரி நன்றி கூறினார்.

Friday, August 27, 2010

அரியலூரிலிருந்து வைப்பூர் கிராமத்துக்கு புதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கம்

அரியலூர்: அரியலூரிலிருந்து வைப்பூர் கிராமத்துக்கு புதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கவிழா நடந்தது. அரியலூரிலிருந்து திருமானூர் பஞ்.,யூனியனுக்குட்பட்ட கடைகோடி கிராமம் வைப்பூருக்கு, கீழப்பழுவூர், கோவிலூர், செட்டிக்குழி, வாண்டராயன்கட்டளை, காமரசவல்லி, குருவாடி வழியாக வைப்பூர் வரை செல்லும் புதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கவிழா, செட்டிக்குழி மற்றும் காமரசவல்லி கிராமங்களில், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் செல்வக்குமார் தலைமையில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர்கள் கோவிலூர் பன்னீர்செல்வம், காமரசவல்லி சுப்ரமணியன் வரவேற்றனர்.

செட்டிக்குழி கிராமத்தில் உள்ள துவக்கபள்ளி வளாகத்தில் புதிய வழித்தட பஸ் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்த, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி பேசியதாவது: நான் கடந்த 96ம் ஆண்டு எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், மிகவும் பின்தங்கிய நிலையில் குக்கிராமமாக இருந்த இந்த, செட்டிக்குழி கிராமத்தின் சாலை மேம்பாட்டுக்காக, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து தார் சாலை அமைக்க வழிவகை செய்தேன். அதன்பிறகு இந்த கிராமத்துக்கு எல்லா மேம்பாட்டு பணியும் கிடைக்கப்பெற்றது. கோவிலூர் பஞ்சாயத்து தலைவரின் கோரிக்கை படி, இதே வழித்தடத்தில் செட்டிக்குழி வழியாக தஞ்சாவூர் செல்லும் வகையிலும் புதிய வழித்தட பஸ்போக்குவரத்து துவக்க, தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் நேருவை விரைவில் சந்தித்து பேசி ஆவன செய்வேன்.

கடந்த நான்கரை ஆண்டில் அரியலூர் தொகுதியில் உள்ள எல்லா ஊர்களிலும் வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள ஏலாக்குறிச்சியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், அரியலூர் வடக்கு ஒன்றியத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், அரசு போக்குவரத்து கழகத்தின் அரியலூர் கிளை மேலாளர் ராமநாதன், திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், துணை தலைவர் கென்னடி, ஒன்றியக்குழு தலைவர்கள் உத்ராபதி, ரெங்கராஜ், பஞ்சாயத்து தலைவர்கள் குருவாடி வீரரவி, தூத்தூர் காமராஜ், தி.மு.க., மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜராஜன், அரியலூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் பனங்கூர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Thursday, August 19, 2010

Panchayat union school opened

Special Correspondent
ARIYALUR: The government schools functioning in the state possessed efficient teachers and the parents should take advantage of the same for building a bright career for their wards, said the District Collector, T. Abraham here on Friday.

The private schools take care in admitting only bright boys with an eye on the public exam results. But government schools admit even those who are poor in studies. The teachers of the government schools leave no stone unturned in motivating and imparting training to these students to secure high marks in the public examinations. The parents and their wards in government schools should understand this fact, Mr. Abraham said while speaking at a function to inaugurate a new panchayat union elementary school in Vannarapettai village in Karuppilakattai panchayat.

To drive his point home, he cited the example of a girl student of the school run by Tirunelveli Corporation securing state first rank in the SSLC exams last academic years (2009-10). The parents should meet the teachers regularly to follow the progress made by their wards in studies, he said.

The government had accorded sanction for starting three panchayat union middle schools in the district and the other two schools will soon be started in Valajanagaran Rajiv Nagar and Senthurai Ambedkar Nagar. Further four government elementary schools will soon be upgraded into middle schools in the district, he added.

Palai D.Amaramoorthy, MLA, Arivazhagan, district panchayat councillor, Jalalakshmi Viswanathan, president of the Karuppilakattalai panchayat, Jothivel, district elementary education officer and others spoke.

அரசின் இலவச கலர் "டிவி' 95% வழங்கல்: எம்.எல்.ஏ., பெருமிதம்

அரியலூர்: அரியலூர் பஞ்., யூனியனுக்குட்பட்ட, சுப்ராயபுரம் மற்றும் காவனூர் பஞ்சாயத்தில் நடந்த தமிழக அரசின் இலவச கலர் "டிவி' வழங்கும் விழாவுக்கு, தாலுகா வழங்கல் அலுவலர்(பொறுப்பு) தண்டபாணி தலைமை வகித்தார்.சுப்ராயபுரம் பஞ்சாயத்து தலைவர் வேம்பு கொளஞ்சியப்பன், காவனூர் பஞ்சாயத்து தலைவர் சூரியகாந்தி கலியபெருமாள் வரவேற்றனர்.

சுப்ராயபுரம் பஞ்.,க்குட்பட்ட குடும்பங்களுக்கான 906 "டிவி' மற்றும் காவனூர் பஞ்.,க்குட்பட்ட 925 "டிவி' வழங்கி, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி பேசியதாவது:அரியலூர் சட்டசபை தொகுதியில் இதுவரை 58 ஆயிரத்து 855 "டிவி' வழங்கப்பட்டுள்ளது. சுப்ராயபுரம் மற்றும் காவனூர் பஞ்சாயத்தில் இப்போது வழங்கப்படும் "டிவி'யுடன், அரியலூர் பஞ்., யூனியனில் உள்ள அனைத்து பஞ்.,லும் "டிவி' வழங்கும் பணி நிறைவடைந்து விட்டது. திருமானூர் பஞ்., யூனியனுக்குட்பட்ட பார்பனச்சேரிக்கு மட்டும் "டிவி' வழங்க வேண்டியுள்ளது.அரியலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட ஒரு சில வார்டு பயனாளிக்கான 5,800 "டிவி' உள்பட, அரியலூர் சட்டசபை தொகுதியில் இன்னும் 9,000 "டிவி' மட்டுமே வழங்க வேண்டியுள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிப்படி அரியலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 95 சதவீத மக்களுக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 சதவீத குடும்பத்துக்கும் அடுத்த மாதம் "டிவி' வழங்கப்பட்டு விடும்.அடுத்ததாக இலவச காஸ் அடுப்பு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

சுப்ராயபுரம் பஞ்சாயத்துக்கு காஸ் அடுப்பு வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு பகுதி நேர ரேஷன்கடை அமைக்கப்பட்டுள்ளது. அதை முழுநேர ரேஷன் கடையாக மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், மாவட்ட பஞ்.,கவுன்சிலர் அறிவழகன், திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், துணை தலைவர் வேம்பு கொளஞ்சிநாதன், பஞ்சாயத்து கிளர்க் காசிநாதன், ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், இளைஞர் காங்கிரஸ் லோக்சபா தொகுதி தலைவர் சுப சுந்தரசோழன், காங்கிரஸ் வட்டார தலைவர் கோவிந்தராஜ், வட்டார காங்கிரஸ் இளைஞர் அணி துணை தலைவர் பொய்யூர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

புதிய சாலைகள்,​​ மேம்பாலங்கள் அமைக்க அரியலூர் எம்எல்ஏ வலியுறுத்தல்

அரியலூர்,​​ மார்ச் 8: ​ ​ ​ அரியலூர் தொகுதிக்குள்பட்ட 12 கிராமச் சாலைகளை நெடுஞ்சாலைத் துறையில் சேர்த்து,​​ புதிய சாலைகள்,​​ மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று அரியலூர் தொகுதி ​ சட்டப்பேரவை உறுப்பினர் பாளை.து.அமரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
​ ​ ​ ​ இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் பாளை.து.அமரமூர்த்தி,​​ மாநில நெடுஞ்சாலைத் துறை ​ அமைச்சர் சாமிநாதனிடம் அளித்த கோரிக்கை ​ மனுவில் கூறியிருப்பதாவது:
​ ​ ​ ​ அரியலூர் தொகுதிக்குள்பட்ட ​ அயன்ஆத்தூர்-​ கிளிமங்களம்-​ அய்க்கால் வரை உள்ள சாலை,​​ ஆனந்தவாடி கிளிமங்களம்-காவனூர்-​ அம்பாபூர் சாலை,​​ அரியலூர்-​ ராவுத்தன்பட்டி-​ அயன்ஆத்தூர் இணைப்புச் ​ சாலை,​​ ராயம்புரம்-​ காவேரி பாளையம்-​ கடுகூர் ​ வரை உள்ள சாலை,​​ மணக்கால்-​ வெண்மணி இணைப்புச் சாலை,​​ கோவிந்தாபுரம்-​ மணக்கால்-​ நல்லாம்பத்தை-​ ஓ.கூத்தூர் வரையுள்ள இணைப்புச் ​ சாலை,​​ ஓட்டக்கோயில்-​ சாளையக்குறிச்சி-​ காவேரிபாக்கம் வரை உள்ள சாலை,​​ அரியலூர்-​ அம்மாக்குளம்-​ பொய்யூர் வரையிலான சாலை,​​ குறிச்சிநத்தம்-​ புதுப்பாளையம் சாலை,​​ கோப்பிலியன்குடிகாடு-​ பெரியநாகலூர் சாலை,​​ சீனிவாசபுரம்-​ மொரக்குழி-​ பொய்யூர் வரையிலான சாலை ஆகிய கிராமச் சாலைகளை நெடுஞ்சாலைத் துறையில் சேர்த்து,​​ புதிய சாலைகள் மற்றும் உயர்மட்ட பாலங்கள் அமைத்துத் தர வேண்டும்.
​ ​ ​ ​ கல்லகம்-​ திருமழபாடி சாலையில் ​ வெங்கனூர்-​ கோவில்எசனை கிராமங்களுக்கிடையில் உள்ள ஆண்டி ஓடைப்பாலம் பழுதடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.​ ​ இந்தப் பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துத் தர வேண்டும்.
​ ​ ​ அரியலூர் தொகுதிக்குள்பட்ட பழைய ​ மாவட்ட சாலைகளான மேலக்கருப்பூர்-​ ஏலாக்குறிச்சி சாலை,​​ மேலக்கருப்பூர்-​ விழுப்பனாங்குறிச்சி சாலை,​​ அரியலூர்-​ பொய்யூர் சாலை,​​ ​ பொய்யூர்-​ சுண்டக்குடி சாலை உள்ளிட்ட சாலைகளை பிரதான மாவட்டச் சாலைகளாக ​ தரம் உயர்த்தி இருவழிப் பாதைகளாக மாற்ற ​ வேண்டும்.
​ ​ ​ அரியலூர் தொகுதியில் உள்ள 5 கி.மீ.​ தொலைவுக்கு மேல் உள்ள ஒன்றியச் சாலைகள் ​ அனைத்தையும்,​​ நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சேர்த்து மேம்பாடு செய்ய வேண்டும்.
​ ​ ​ அரியலூர் தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ​ ஒன்றிய சாலைகளான சுண்டக்குடி-​ ஓரியூர் சாலை,​​ சுண்டக்குடி-​ சிலுப்பனூர் சாலை,​​ ​ அரியலூர்-​ முட்டுவாஞ்சேரி சாலை,​​ திருச்சி-​ சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து செம்மந்தங்குடி செல்லும் சாலை,​​ பொய்யூர்-​ சுண்டக்குடி-​ வைப்பம் செல்லும் சாலை,​​ ​ கருவிடைச்சேரி செல்லும் சாலை,​​ ஓட்டக்கோயில்-​ ஓ.கூத்தூர் செல்லும் சாலை,​​ அரியலூர்-​ ஒ.கூத்தூர் சாலை உள்ளிட்ட சாலைகளை ​ நெடுஞ்சாலைத் துறையின் கீழ் எடுத்து மேம்பாடு செய்ய வேண்டும் என்று அவர் ​ கேட்டுக்கொண்டுள்ளார்

இலவச கலர் "டிவி' வழங்கும் விழா

அரியலூர்: அரியலூர் அருகே, மேலக்கருப்பூர் பஞ்சாயத்தை சேர்ந்த கருவிடச்சேரி கிராமத்தில் நடந்த, தமிழக அரசின் இலவச கலர் "டிவி' வழங்கும் விழாவுக்கு, டி.ஆர்.ஓ., பிச்சை தலைமை வகித்தார். பஞ்., தலைவி ராதா கிருஷ்ணவேணி பாலசுப்ரமணியன் வரவேற்றார். மேலக்கருப்பூர் பஞ்சாயத்துக்குட்பட்ட 1,381 குடும்பங்களுக்கான தமிழக அரசின் இலவச கலர் "டிவி'க்களை, எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி வழங்கி பேசினார். விழாவில், மண்டல துணை தாசில்தார் கதிரவன், ஆர்.ஐ., கோவிந்ராஜ், திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், மாவட்ட பஞ்., கவுன்சிலர் அறிவழகன், பொய்யூர் இளங்கோவன், மேலக்கருப்பூர் பஞ்சாயத்து துணை தலைவர் மாரியாயி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

பஞ்.,யூனியன் துவக்க பள்ளி திறப்பு விழா

அரியலூர்: அரியலூர் ராஜீவ்நகரில் பஞ்.,யூனியன் துவக்கப்பள்ளி திறப்பு விழா நடந்தது. அரியலூர் அருகே வாலாஜாநகரம் பஞ்சாயத்துக்குட்பட்ட ராஜீவ் நகருக்கு, தமிழக அரசு சார்பில் நடப்பு கல்வியாண்டில் அறிவிக்கப்பட்ட பஞ்.,யூனியன் துவக்கபள்ளிக்கான தொடக்கவிழா மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் தலைமை வகித்து திறந்து வைத்தார்.

அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி முன்னிலை வகித்தார். விழாவில் சி.இ.ஓ., கார்த்தியாயிணி, மாவட்ட பஞ்.,கவுன்சிலர் ஜோதிலெட்சுமி பவுன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் பாண்டியன், வாலாஜாநகரம் பஞ்சாயத்து தலைவர் தெய்வ இளையராஜன், உதவி தொடக்க கல்வி அலுவலர் கருணாநிதி, பள்ளியின் தலைமை ஆசிரியர் தேத்ரவு ஸ்டெல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புகைப்பட செய்திகள்




Posted by Picasa

முதல் பதிவு

அரியலூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் உயர்திரு. பாளை அமரமூர்த்தி அவர்கள் புகழ்பாடும் வலைபதிவு. இந்த வலைபதிவு ஒரு அதிகாரபூர்வமற்ற வலைபதிவு. அவரின் தொண்டனால் நடத்தபடுகிறது. வலைபதிவில் வரும் செய்திகளுக்கும் சட்ட மன்ற உறுப்பினர் உயர்திரு. பாளை அமரமூர்த்தி அவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.