Pages

Friday, September 24, 2010

Multipurpose buildings, development works inaugurated

The State government accords priority for implementing various welfare schemes for the benefit of Adi Dravidar community people in the State, said A.Tamilarasi, Minister for Adi Dravidar Welfare, on Monday.

The Minister who inaugurated several multipurpose buildings and development works in the Manakkal, Kuzhumur and Vettiarvettu Adi Dravidar colonies in Manakkal panchayat in Ariyalur district, said that more than Rs.five crore had been spent for implementation of various welfare schemes and development works including construction of school buildings, basic amenities and other infrastructure facilities in the Adi Dravidar colonies.

Mrs Tamilarasi said that Chief Minister M.Karunanidhi took special steps and has sanctioned Rs.110 crore through NABARD for various development works in the Adi Dravidar colonies. The Minister said that the pass percentage in the Adi Dravidar schools in the State had crossed more than 80 per cent in the SSLC and Plus Two public examinations.

The Minister also distributed free house site pattas to seven beneficiaries and marriage grants of Rs.20,000 to 59 beneficiaries under Moovalur Ramamirtham Marriage Assistance Scheme.

Collector T.Abraham who presided over the function explained in detail the various development and welfare schemes being implemented in the district for the benefit of the Adi Dravidar community people. MLAs Palai.D.Amaramurthy (Ariyalur) and Rajkumar (Perambalur) and other dignitaries spoke.

Earlier, the Minister who inspected the Adi Dravidar students hostel at Government Arts College in Ariyalur advised the students to keep the hostel clean and tidy. She also instructed the officials to provide the facilities required by the students.

Friday, September 17, 2010

பனங்கூர் கிராமத்தில் பகுதிநேர ரேஷன்கடை திறப்பு விழா



அரியலூர்: அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி அருகே ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்துக்கு உட்பட்ட உள்ள பனங்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட பகுதிநேர ரேஷன்கடை திறப்பு விழா நடந்தது.ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்து தலைவர் சுப்ரமணியன் வரவேற்றார்.

அரியலூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ரேஷன்கடையை திறந்துவைத்து, அரியலூர் எம்.எல்.., பாளை அமரமூர்த்தி பேசியதாவது:இன்றைய காலகட்டத்தில் ரேஷன் பொருட்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முதலிடம் வகிப்பதாக உள்ளது. எனவே, அரசின் விதிகளை தளர்த்தி இந்த பனங்கூர் கிராமத்தில் பகுதி நேர ரேஷன்கடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.வாழைக்குழி, நானாங்கூர், நெருஞ்சிக்கோரை ஆகிய ஊர்களிலும் திருமானூர் காந்தி நகர் பகுதியிலும் பகுதி நேர ரேஷன்கடைகள் திறக்கப்படும்.

பனங்கூர் ரேஷன்கடையானது வாரம் ஒருநாள் வியாழக்கிழமையன்று இயங்கும். கூடுதல் பணியாளர் நியமிக்கப்பட்ட பிறகு, வாரம் இரண்டு நாள் இயங்க உத்தரவிடப்படும். பொதுமக்கள் இதை பயன்படுத்தி வளமாக வாழ வேண்டும்.

சுண்டக்குடி பகுதிக்கு அரியலூரிலிருந்து கூடுதல் பஸ்வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றம் தொடர, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சிதம்பரம் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப சுந்தரசோழன், கதிர்வேல் மைன்ஸ் கணேசன், ஆர்.., லெனின் சசிக்குமார், வி..., முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், பஞ்சாயத்து துணை தலைவர் குணசேகரன், காங்கிரஸ் வட்டார தலைவர் சௌந்தர்ராஜன், மதிவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஓட்டக்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Thursday, September 16, 2010

ஏலாக்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை: சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி

அரியலூர், ஆக. 26: அரியலூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி.

திருமானூரிலிருந்து செட்டிக்குழி வழியாக கோவிலூர், காமரசவல்லி வரையிலான புதிய பேருந்து வழித்தடத்தை, புதன்கிழமை செட்டிக்குழியில் கொடியசைத்துத் தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது:

அரியலூர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பேருந்து வசதி இல்லாத சிற்றூர்களை கண்டறிந்து, கடந்த 4 ஆண்டுகளில் படிப்படியாக அந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

செட்டிக்குழி கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து | 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை வசதி மேம்படுத்தப்பட்டு, தற்போது பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏலாக்குறிச்சியிலும், செந்துறை- அரியலூர் இடையே ஏதேனும் ஒரு ஊரிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்துத் தருமாறு மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த அரசிடமிருந்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார் அமரமூர்த்தி.

இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் எம். பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் ஆர். செல்வக்குமார், கிளை மேலாளர் எஸ். ராமநாதன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் மா. நடராஜன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் இரா. கென்னடி, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர். ரங்கராஜன், குருவாடி ஊராட்சித் தலைவர் வீர. ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சிஆதிதிராவிடர் நலத் துறைக்கு | 2,905 கோடி நிதி ஒதுக்கீடு

அரியலூர், செப்.13:    கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஆதி திராவிடர் நலத் துறைக்கு  | 2,905 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ஆ. தமிழரசி.


அரியலூர் மாவட்டம், மணக்காலில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மணக்கால், குழுமூர் மற்றும் வெட்டியார்வெட்டு கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு பல்நோக்கு மையக் கட்டடங்களைத் திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அவர் மேலும் பேசியது:
    
திமுக தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக 5-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் ஆதிதிராவிடர் நல மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.
    
ஆதிதிராவிடர் நலத் துறை மாணவர்களுக்காக அடிப்படைக் கட்டமைப்பு, உள் கட்டமைப்பு வசதிகளுக்காக | 50 கோடியை திமுக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆதிதிராவிடர் மாணவர்களும் தனியார் பள்ளிகளிலும் படிக்கும் வகையில், மாவட்டத்துக்கு 10 பேர் வீதம் அவர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர்ந்து படிக்க ஏதுவாக, பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவர்களுக்குத் தேவையான நிதியை அரசு வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதற்காக மட்டும் | 3.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தனியார் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் ஆதிதிராவிட மாணவர்களுக்கும் அரசு நிதியுதவி செய்கிறது. பிளஸ் 2 வரை அவர்களுக்கு அரசே தேவையான உதவியை செய்து வருகிறது. கடந்தாண்டில் மட்டும் | 3.17 கோடி இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றார் அமைச்சர் தமிழரசி.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாளை. து. அமரமூர்த்தி, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.