Pages

Thursday, March 31, 2011

அண்ணன் அதிகபடியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்

அரியலூர் மாவட்டத்தில், அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் என மூன்று சட்டசபை தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்பில் தற்போது அரியலூர், ஜெயங்கொண்டம் என இரண்டு சட்டசபை தொகுதி மட்டுமே உள்ளன.

 

 

அரியலூர்: 1967 முதல் 2006ம் ஆண்டு வரை நடந்த 10 சட்டசபை பொது தேர்தல்களில், அரியலூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க., நான்கு முறையும், அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு அரியலூர் சட்டசபை தொகுதியில் வன்னியர் 30 சதவீதம், உடையார் மற்றும் மூப்பனார் தலா 20 சதவீதம், தலித் 10 சதவீதம், யாதவர் உள்ளிட்ட இதர சமூகத்தினர் 10 சதவீதம் என்ற நிலையில் ஓட்டு வங்கி உள்ளது.

 

 

அரியலூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில், மூப்பனார் சமூகத்தைச் சேர்ந்த பாளை அமரமூர்த்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். "சிட்டிங்' எம்.எல்.ஏ.,வான பாளை அமரமூர்த்திக்கு ஆதரவாக, தி.மு.க., - பா.ம.க., - வி.சி., உள்ளிட்ட கட்சிகள் களம் இறங்கியுள்ளன. அ.தி.மு.க., சார்பில், கட்சியின் மாவட்ட இணைச் செயலரும், உடையார் சமூகத்தைச் சேர்ந்தவருமான, துரை மணிவேல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்திய ஜனநாயகக் கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கர், காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர் பன்னீர்செல்வம் போட்டியிடுகின்றனர்.

 

 

அ.தி.மு.க., வேட்பாளர் துரை மணிவேல், தொகுதிக்கு புதுமுகம் என்பதால், அ.தி.மு.க.,வினர் கோஷ்டி பூசலை மறந்து செயல்படுகின்றனர். அரியலூர் தொகுதியில் 10 சதவீதம் ஓட்டு வங்கியுள்ள தே.மு.தி.க., ஆதரவு அ.தி.மு.க., வேட்பாளருக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அ.தி.மு.க., வெற்றி பெற்றால் அரியலூர் மாவட்டம் பறிபோவது உட்பட பல்வேறு இழப்பு ஏற்படுமோ என்ற பயம், மக்கள் மத்தியில் தற்போதும் நிலவுகிறது.

 

 

தி.மு.க., ஆட்சியில் அரியலூர் பகுதியில் செய்யப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணி, மக்கள் விருப்பத்துக்கேற்ப மீண்டும் "அரியலூர் மாவட்டம்' உருவாக்கப்பட்டது. தி.மு.க., - பா.ம.க., - வி.சி., கூட்டணி கட்சிகளின் ஆதரவு போன்ற சாதகமான அம்சங்கள், அரியலூர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு கூடுதல் பலம்.

 

 

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம், வரதராஜன் பேட்டை பேரூராட்சிகள், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியங்கள், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு சில வருவாய் கிராமங்களைக் கொண்ட ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் வன்னியர் 55 சதவீதம், தலித் 20 சதவீதம், முதலியார் 10 சதவீதம், வெள்ளாளர், யாதவர் உள்ளிட்ட இதர சமூகத்தினர் 15 சதவீதம் பேர் உள்ளனர்.

 

 

தற்போதைய தேர்தலில், பா.ம.க., சார்பில், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குரு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க., காங்., வி.சி., உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர், குரு வெற்றிக்காக முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர். அ.தி.மு.க., சார்பில் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலரும், அரியலூர் சட்டசபைத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மூப்பனார் சமூகத்தைச் சேர்ந்தவருமான இளவழகன், வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்திய ஜனநாயகக் கட்சியும் தன் பங்குக்கு, ராமச்சந்திரன் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

 

 

கடந்த சட்டசபை தேர்தலில் தனக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கு காரணமான அம்சங்களை கண்டறிந்து, அவற்றை தவிர்க்கும் வகையில், முதலியார் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூக மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், காடுவெட்டி குரு செயல்படுகிறார்.

 

 

அ.தி.மு.க.,வை பொறுத்தவரை கட்சி செல்வாக்கும், பணபலமும் மிக்க இளவழகன், ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்கு வேட்பாளர் என்றாலும், சட்டசபைத் தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில், ஜாதி பலமும் முக்கிய காரணியாக அமையும் என்பது, அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., வெற்றி பெறுவது, கூட்டணி கட்சியினர் செயல்பாட்டில் தான் உள்ளது.

 

 

முக்கிய தொழில் : விவசாயம், நெசவு

 

 

நீண்டகால கோரிக்கைகள் : கொள்ளிடத்தில் தடுப்பணை, முந்திரி தொழிற்சாலை, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்.

 

NANDRI WWW.DINAMALAR.COM

 

அரியலூர் தொகுதியில் அசைக்கமுடியாத மாவீரன் அண்ணன் உயர்திரு பாளை அமரமூர்த்தி. நீங்கள் அதரவாக எழுதினாலும் எழுதவிட்டாலும் முடிவு இதுதான். அண்ணன் அதிகபடியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். அன்புடன் பளையர்தொண்டன்

Tuesday, March 29, 2011

உங்களுடைய பொன்னான வாக்குகளை கை சின்னத்தில் அளிக்க அன்புடன் வேண்டுகிறோம்

 

Saturday, March 26, 2011

காங்கிரஸ் வேட்பாளர் பாளை.அமரமூர்த்தி கூட்டணி கட்சியினருடன் வந்து வேட்பு மனுத்தாக்கல்

அரியலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பாளை.அமரமூர்த்தி தனது வேட்புமனுவை கூட்டணி கட்சியுடனருடன் வந்து ஆர்.டி.ஓ. அலு வலகத்தில் தேர்தல் அலுவலர் ஸ்ரீதரனிடம் தாக்கல் செய்தார்.இவர் தனது சொத்துமதிப்பு ரூ.27 லட்சத்து 35 ஆயிரத்து 369 என்று கூறியுள்ளார்.

 

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் பாளை. அமரமூர்த்தி நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக கூட்டணி கட்சிப் பொறுப்பாளர்களான தி.மு.க. மாவட்டச் செயலாளர் சிவசங்கர், பா.ம.க. மாநில துணைப்பொதுச் செயலாளர் பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சிப் பொறுப் பாளர்களுடன் ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் எதிரேயுள்ள காமராஜர், பெரியார், அம்பேத்கார், அண்ணா சிலைகளுக்கு மாலையணிவித்தார்.

 

பின்னர் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து அரியலூர் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் பாளை.அமரமூர்த்தி, தேர்தல் அதிகாரி ஸ்ரீதரனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சியின் மாற்று வேட்பாள ராக பாளை.அமரமூர்த்தியின் மனைவி குமுதவல்லி மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைச் செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான பழனிச்சாமி ஆகியோர் தஙகளது வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் ஸ்ரீதரனிடம் தாக்கல் செய்தனர்.

 

வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள பாளை.அமரமூர்த்தி தனது வேட்புமனுவில். அசையும் சொத்துக்களின் மதிப்பாக ரூ. 24லட்சத்து 13ஆயிரத்து 369&ம், அசையா சொத்துக்க ளின் மதிப்பாக ரூ. 3லட்சத்து 22ஆயிரம் மற்றும் கடன் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் தன் மீது வழக்குகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Wednesday, March 23, 2011

தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? யார்?

அரியலூர் பாளை தி அமரமூர்த்தி

தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? யார்?

புதுடில்லி : நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் மேலிடம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை தி.மு.க., கூட்டணியில் இருந்து சந்திக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கியது தி.மு.க., காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவர். வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு :

1
மயிலாப்பூர்- ஜெயந்தி தங்கபாலு
,
1
திருத்தணி - சதாசிவலிங்கம்
,
3
ஆவடி - தாமோதரன்
,
4
ஸ்ரீபெரும்புதூர் - யசோதா
,
5
ஆலந்தூர் - காயத்ரி தேவி
,
6
டி.நகர் - செல்லக்குமார்
,
7
மதுராந்தகம் ஜெயக்குமார்,

8
சோளிங்கர்- அருள் அன்பரசு,
9
ராயபுரம் - மனோ
,
10
ஆம்பூர் - விஜய் இளஞ்செழியன்
,
11
கிருஷ்ணகிரி- ஹசீனா சையத்
,
12
ஆத்தூர்- அர்த்தநாரி
,
13
செங்கம்- செல்வப்பெருந்தகை
,
14
ஓசூர்-கோபிநாத்
,
15
கலசப்பாக்கம்-விஜயக்குமார்
,
16
திரு.வி.க., நகர் - நடேசன்
,
17
வேலூர் - ஞானசேகரன்
,
18
ஈரோடு ( மேற்கு) - யுவராஜ்
,
19
சேலம் (வடக்கு)- ஜெய் பிரகாஷ்
,
20
மொடக்குறிச்சி - பழனிச்சாமி
,
21
உதகை - கணேஷ்
,
22
தொண்டாமுத்தூர் - கந்தசாமி
,
23
வால்பாறை- கோவை தங்கம்
,
24
கரூர்- ஜோதிமணி
,
25
மணப்பாறை- டாக்டர் சுப. சோமு
,
26
ரிஷிவந்தியம்- சிவராஜ்
,
27
திருச்சங்கோடு - சுந்தரம்
,
28
முசிறி - ராஜசேகரன்
,
29
விருத்தாச்சலம் - நீதி ராஜன்
,
30
திருத்துறை பூண்டி - செல்லத்துரை
,
31
மயிலாடுதுறை- ராஜ்குமார்
,
32
காரைக்குடி - கே.ஆர். ராமசாமி
,
33
செய்யார் - விஷ்ணு பிரசாத்
,
34
தொண்டாமுத்தூர் - கந்தசாமி
,
35
வேடசந்தூர் - தண்டபாணி
,
36
அரியலூர் - பாளை தி அமரமூர்த்தி
,
37
பட்டுக்கோட்டை - என்.ஆர்.ரங்கராஜன்
,
38
திருமயம் - ராமசுப்புராம்
,
39
மதுரை (வடக்கு) - ராஜேந்திரன்

40
திருப்பரங்குன்றம்- சி.ஆர். சுந்தர்ராஜன்,
41
விளாத்திகுளம்- பெருமாள் சாமி
,
42
விருதுநகர் - நவீன் ஆம்ஸ்ட்ராங்
,
43
நாங்குநேரி - வசந்தகுமார்
,
44
ராதாபுரம் - வேல்துரை
,
45
மதுரை தெற்கு - வரதராஜன்
,
46
சிங்காநல்லூர் - மயூரா ஜெயக்குமார்
,
47
திருத்துறைபூண்டி - செல்லத்துரை
,
48
பரமக்குடி - ராம்பிரபு
,
49
கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்
,
50
வாசுதேவநல்லூர் - கணேசன்
,
51
குளச்சல் - ராபர்ட் ரூப்ஸ்
,
52
பேராவூரணி -கே.மகேந்திரன்

53
சிவகங்கை - வி.ராஜசேகரன்
54
கா‌ங்கேயம் - விடியல் எஸ் சேகர்
55
நிலக்கோட்டை -ராஜாங்கம்
56,.
பாபநாசம் - ராம்குமார்
57
ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி
58 .
கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்
59.
விளவங்கோடு - விஜய தரணி
60 .
அறந்தாங்கி - திருநாவுக்கரசர். பூந்தமல்லி, ராமநாதபுரம், திருப்பூர் தெற்கு ஆகிய 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.
மேலும் அரசியல் செய்திகள்:

Thursday, March 17, 2011

திருமழபாடியில் நந்தியெம்பெருமான் திருமணம்

திருமழபாடியில் நந்தியெம்பெருமான் திருமணம்

 

அரியலூர்: திருமழபாடியில் நந்தியெம்பெருமானுக்கு கோலாகல திருமணம் நடந்தது.ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம், ஸ்ரீ சீதா-ராமர் திருமணம் உள்பட பல தெய்வ திருமணங்களை போல உலகெங்கும் உள்ள சிவாலயங்களில், சிவபெருமானுக்கு காவலனாகவும், தோழனாகவும் விளங்கும் நந்தியெம்பெருமானுக்கு, அரியலூர் மாவட்டம், திருமழபாடி கொள்ளிடக்கரையில் உள்ள வைத்தியநாதஸ்வாமி கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரத்தன்று திருமண உற்சவம் நடக்கிறது.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள அந்தணர் குறிச்சி கிராமத்தில் வயலில் உழுத போது கிடைக்கப்பெற்றவர் நந்தியெம்பெருமான். தொடர்ந்து திருவையாறு ஐயாரப்பர் கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டு, அங்கிருந்து அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாரப்பருடன் கடந்த 15ம் தேதி காலையில், பெண் வீடான திருமழபாடிக்கு புறப்பட்ட நந்தியெம்பெருமான், வெள்ளி தலைப்பாகையுடன் குதிரை வாகனத்தில் அமர்ந்து, திருநெய்தானம், கடுவெளிப்பனையூர், வைத்தியநாதன் பேட்டை வழியாக வந்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கினார். அதே நேரத்தில் திருமழபாடியிலிருந்து சுந்தராம்பிகை உடனமர் வைத்தியநாதஸ்வாமி, கண்ணாடி பல்லக்கில் சென்று சம்பந்திகளையும், மணமகனையும் வரவேற்றனர்.நேற்று முன்தினம் இரவு திருமழபாடி கோயில் வளாகத்தில் மனிதகுல சம்பிரதாயப்படி திருமண நிகழ்ச்சி துவங்கியது. நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பிறகு சீர்வரிசையுடன், கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண மேடைக்கு, மணப்பெண் அழைத்து வரப்பட்டார்.

 

வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் புதல்வியுமான சுயஸாம்பிகா தேவிக்கும், சிலாத முனிவரின் புதல்வரான நந்தியெம்பெருமானுக்கும், ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை மற்றும் யாக வேள்வியுடன் துவங்கி, மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட திருவையாறு ஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, கோயில் ஸ்தானிகர் வீட்டு பெண் ஜானகி, மணமகளுக்கு நாத்தி முடிச்சு திருமண உற்சவத்தை நிறைவு செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பலரும், நமச்சிவாய வாழ்க, தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என கோஷமிட்டனர். உலகில் வேறு எங்கும் காணமுடியாத விழாவாக, பக்தி சிரத்தையுடன் நடந்த இத்திருமண விழாவில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கோவை ராதாகிருஷ்ணன், அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி, ஆர்.டி.ஓ., ஸ்ரீதரன், ஹிந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர்கள் திருச்சி பாலசுப்ரமணியன், தஞ்சாவூர் லெட்சுமணன், உதவி ஆணையர் அரியலூர் சித்ரா, கோயில் நிர்வாக அலுவலர் முருகேஷ், நிர்வாகி முருகேசன், பக்த பிரமுகர் சிவானந்தம் பிள்ளை, வக்கீல் கண்டிராதித்தம் விஸ்வநாதன் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த பொதுமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.