Pages

Thursday, October 13, 2011

காங்கிரஸôர் விருப்ப மனு

அரியலூர், செப். 19: அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அந்தக் கட்சியினர் திங்கள்கிழமை விருப்ப மனு அளித்தனர்.

 

இதையொட்டி, அரியலூர் நீதிமன்றம் அருகிலுள்ள கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டத் தலைவரும், சட்டபபேரவை முன்னாள் உறுப்பினருமான பாளை து. அமரமூர்த்தி தலைமை வகித்து, கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றார்.

 

அரியலூர், ஜயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர் பதவிகள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், பேரூராட்சித் தலைவர், உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளுக்கு கட்சியினர் விருப்ப மனு அளித்தனர்.

 

நிகழ்ச்சியில் கட்சியின் அரியலூர் நகரத் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீதர், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பழனிச்சாமி, செந்துறை ஒன்றியத் தலைவர் கொளஞ்சிநாதன், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் குருமூர்த்தி, தா.பழூர் வட்டாரத் தலைவர் முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங். வேட்பாளர்களுக்காக முன்னாள் எம்எல்ஏ பாளை து. அமரமூர்த்தி பிரசாரம்

அரியலூர், அக். 9: உள்ளாட்சித் தேர்தலில் அரியலூர் ஒன்றியத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார் முன்னாள் எம்எல்ஏ பாளை து. அமரமூர்த்தி.

 

அரியலூர் தெற்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பனங்கூர் கே. சுப்பிரமணியன், காவனூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் சே. செல்லக்கண்ணு உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து  விளாங்குடி, காவனூர்ஒரத்தூர், காத்தான்குடிகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்  பாளை து. அமரமூர்த்தி.

 

அவர் தனது பிரசாரத்தில், மாவட்டத்தை மீண்டும் புதிதாக உருவாக்கவும்,அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை கொண்டு வந்ததற்கும், அரியலூர் நகரில் புதைச் சாக்கடைத் திட்டத்தை உருவாக்கவும் சட்டப்பேரவையில் தான் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால்தான், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்ற முடிந்தது.  

 

மேலும், அரியலூர் தொகுதி மக்களின் 75 சதப் பணிகள் கடந்த 5 ஆண்டு ôலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

மக்கள் பிரச்னையைத் தீர்க்கப் பாடுபட்ட காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.

 

இந்தப் பிரசாரத்தில் வேட்பாளர்கள் கே. சுப்பிரமணியன், செல்லக்கண்ணு, வெளிப்பிரிங்கியம் காமராஜ், ரெட்டிப்பாளையம் துரை. வரதராஜன், காங்கிரஸ் நிர்வாகிகள்  பழனிச்சாமி, சஞ்சய்காந்தி, கோவிந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Monday, April 18, 2011

தொகுதி விவரம்: அரியலூர்

தொகுதி விவரம்: அரியலூர்  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதால் கனிம வளம் பெற்றுள்ள பூமி. தமிழ்நாட்டிலேயே சிமெண்ட் உற்பத்தியில் முதலிடத்தைப் பிடித்து ஏழு மிகப்பெரிய தொழிற்சாலைகளும் உள்ளன. சின்ன திருப்பதி என்று கிராம மக்களால் அழைககப்படும் அரியலூர் அருள்மிகு கலியுக வரதராஜபெருமாள் ஆலயம், தேவாரமி மூவராலும் பாடல் பெற்ற திருமழபாடி ஸ்ரீ வைத்தியநாதசுவாமி ஆலயம், வீராமமுனிவரால் உருவாக்கப்பெற்ற புகழ்பெற்ற ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆகியவை பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் இந்த தொகுதியில் உள்ளன. வேட்டக்குடி பறவைகள் சரனாலயம் சுற்றுலா தலமாக உருவெடுத்து வருகிறது. மருதையாற்றில் ஏற்ப்பட்ட விபத்து மற்றும் நாச வேலை காரணமாக இருமுறை இந்திய அளவில் பரபரப்பு ஏற்படுத்திய தொகுதி.

 

தமிழ்தீவிரவாதிகளால் ஒருகாலத்தில் அச்சுருத்தல்கள் ஏற்பட்டு இன்று அமைதியாக உற்பத்தியில் கவனம் செலுத்தும் மாவட்டம். அரியலூர் சட்டமன்ற தொகுதி, அரியலூர், திருமானூர் என இரண்டு முழுஊராட்சி ஒன்றியங்களும், ஜெயங்கொண்டம், தா.பழூர் என இருஊராட்சிகளில் 20 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. இதில் பெண் வாக்காளர்களே அதிகம் உளளனர், இத்தேர்தலில் 1,06,821 ஆண் வாக்காளர்களும் , 1,08,648 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,15,469பேர் வாக்காளர்களாக உள்ளனர், இச்சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குசாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பதட்டம் நிறைந்தவை, அதிகம் பதட்டம் ஏற்படுத்தக்கூடியவை, அரசியல் மோதலினால் பதட்டம் ஏற்ப்படுத்தக்கூடியவை என 18வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு பாதுகாப்பு ஏற்ப்படுகள் செய்யப்பட்டுள்ளன, தி.மு.க - அ.தி.மு.க ஆகியவற்றின் கோட்டை என்ற அழைக்கப்படும், இச்சட்டமன்றத் தொகுதியில் 1957 ஆம் வருடத் தேர்தலில் இருந்து இதுவரை தி.மு.க 5 முறையும், அ.தி.மு.க 3 முறையும், காங்கிரஸ் 4 முறையும் ( தா.ம.க 1 முறை ) வெற்றி பெற்றுள்ளன.

 

இத் தொகுதியில் வன்னியர் 27% உடையார் 24% மூப்பனார் 16% தாழ்த்தப்பட்டோர் 22% மற்றும் இதர வகுப்பினர் தலா 11% சதவீதமும் வாக்காளர்களாக உள்ளனர், தொகுதி சிரமைப்பிற்கு முன்னர் மூப்பனார், உடையார் சமூகத்தினர் அதிகம் இருந்ததால் போட்டியிடும் எதிரெதிர் வேட்பாளர்களாகவும், வெற்றி பெறுபவர்கள் இவர்களின் ஒரு சமூத்தினராகவே இருந்தனர். இந்நிலையில் தற்போது மறுசீரமைப்பால் வன்னியர்கள் அதிக சதவீதத்தில் உள்ளனர். முக்கிய கோரிக்கைகள் திருமானூர் டெல்டா பாசன விவசாயிகளின் நலன் காக்க நவீன அரிசி ஆலை உருவாக்க வேண்டும். 1959 -ல் தொடங்கப்பட்ட புள்ளம்பாடி வாய்க்கால், மதகுகள் சீர்படுத்தப்பட்டு செப்பனிட வேண்டும். வழியில் உள்ள குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட வேண்டும். பச்சை மலையில் உருவாகி சிறுவாச்சுரில் தொடங்கி வரும் மருதையாற்று நீர் கொள்ளிடத்திற்கு சென்று வீணாகிறது. இதன் குறுக்கே தடுப்பணை` கட்டி நீரை பறவைகள் சரணாலயமான கரைவெட்டி ஏரிக்கு கொண்டு செல்ல வேண்டும்.

 

அரசு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்த வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் பல மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு கூட்டுத் குடிநீர்த் திட்டங்களுக்கு ஆழ்கிணறு அமைத்து நீர் எடுத்து செல்லப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய வீராணம் விரிவாக்கத் திட்டத்தின் போது அறிவிக்கப்பட்ட கொள்ளிடம் ஆற்றில் தடுப்பாணைகள் கட்டி நீர்சேகரிப்பை உருவாக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள் ஆகும். மேலும் பால் உற்பத்தியில் தன்னிறைவுப் பெற்ற இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பாலை சேமித்து வைக்க விளாங்குடியில் அறிவிக்கப்பட்ட பால் குளிருட்டும் நிலையத்தை உடனே தொடங்க வேண்டும், கொள்ளிடக்கரையை பலப்படுத்தி வாகனங்கள் செல்லும் அளவிற்கு அகலப்படுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

2011-வாக்குப்பதிவு சதவீதம் :68% மாவட்டம் :அரியலூர் மொத்த வாக்காளர்கள்:215469 ஆண் வாக்காளர்கள் :106831 பெண் வாக்காளர்கள் :108638 திருநங்கை வாக்காளர்கள்:0

 

Nandri : malaimalar.com

 

Wednesday, April 13, 2011

அரியலூர் மாவட்டத்தில் பாளை து. அமரமூர்த்தி வாக்குப் பதிவு

அரியலூர் மாவட்டத்தில் தொல். திருமாவளவன், வேட்பாளர்கள், ஆட்சியர் வாக்குப் பதிவு

 

அரியலூர், ஏப்.13: அரியலூர் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வேட்பாளர்கள், ஆட்சியர் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

 

அரியலூர் வாலாஜாநகரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி முதல் வாக்கைப் பதிவு செய்து வாக்குப் பதிவைத் தொடக்கி வைத்தார்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நஜ்முல் ஹோதா அரியலூர் ஆர்.சி. செயின்ட் மேரீஸ் பள்ளியிலும் வாக்களித்தனர்.

 

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பாளை து. அமரமூர்த்தி தனது சொந்த கிராமமான திருமானூர் ஒன்றியம், பாளையப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், அதிமுக வேட்பாளர் துரை. மணிவேல் இலந்தைக்கூடம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பாஜக வேட்பாளர் பி. அபிராமி கீழக்கொளத்தூர் அரசுப் பள்ளியிலும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சி. பாஸ்கர் தனது சொந்த ஊரான தேளூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார்.

 

இதுபோல, ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் காடுவெட்டி ஜெ. குரு தனது சொந்த ஊரான ஆண்டிமடம் அருகிலுள்ள ப. காடுவெட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், அதிமுக வேட்பாளர் ப. இளவழகன் திருமானூர் ஒன்றியம், அன்னிமங்கலம் பள்ளியிலும், பாஜக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர்.

 

Tuesday, April 12, 2011

அரியலூர், ஜயங்கொண்டத்தில் பிரசாரம் நிறைவு

அரியலூர், ஜயங்கொண்டத்தில் பிரசாரம் நிறைவு

 

அரியலூர், ஏப். 11: அரியலூர், ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

 

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பாளை து. அமரமூர்த்தியை ஆதரித்தும், ஜயங்கொண்டம் பாமக வேட்பாளர் ஜெ. குருவை ஆதரித்தும் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.

 

அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளர் துரை. மணிவேலை ஆதரித்து அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பெரம்பலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டும் அரியலூரில் பிரசாரம் செய்தார். மற்ற தலைவர்கள் யாரும் அரியலூர் வரவில்லை. ஜயங்கொண்டம் பகுதிக்கு அதிமுக, தேமுதிக முக்கியத் தலைவர்கள் யாரும் பிரசாரம் செய்ய செல்லவில்லை.

 

இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் அந்தக் கட்சியிóன் நிறுவனர் பச்சமுத்து 2 முறை அரியலூர் வந்து பிரசாரம் செய்தார்.

 

நிறைவு நாள் பிரசாரம்: அரியலூர் காங்கிரஸ் வேட்பாளர் பாளை அமரமூர்த்தி திங்கள்கிழமை தா. பழூர் ஒன்றியத்தில் உள்ள காட்டுப்புத்தூர், சாத்தம்பாடி, காசாங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

 

அதிமுக வேட்பாளர் துரை. மணிவேல் திருமானூர் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். செம்பியக்குடியில் இரு சக்கரன வாகன ஊர்வலம் புறப்பட்டு பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்று திருமானூரில் முடிவடைந்தது. அரியலூர் நகரம் சார்பில் இரு சக்கர வாகனப் பேரணி மற்றும் ஊர்வலமாகச் சென்று வாக்குகளை அதிமுக, தேமுதிகவினர் சேகரித்தனர்.

 

ஜயங்கொண்டம் தொகுதி பாமக வேட்பாளர் ஜெ. குரு திங்கள்கிழமை ஜயங்கொண்டம் கடைவீதிகளிலும், சந்தைப்பேட்டையிலும் வாக்கு சேகரித்து, காந்தி சிலை முன்பு பிரசாரத்தை நிறைவு செய்தார்.    இதுபோல, அதிமுக வேட்பாளர் ப. இளவழகன் ஜயங்கொண்டம் கடைவீதிகளில் பிரசாரம் செய்து நிறைவாக நான்குரோட்டில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

Tuesday, April 5, 2011

அரியலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அரியலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

 

அரியலூர், ஏப். 4: அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தா. பழூர் ஒன்றியப் பகுதிகளில் அரியலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பாளை து. அமரமூர்த்தி திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

தா.பழூர் ஒன்றியம், காசாங்கோட்டை காலனி, புதுப்பாளையம், திருபுரந்தான், அணைக்குடி, அரங்கோட்டை, கீழகோவிந்தபுத்தூர் காலனி, கீழகோவிந்தபுத்தூர், குமணந்துறை, மேலகோவிந்தபுத்தூர், சாத்தம்பாடி, முத்துவாஞ்சேரி அண்ணாநகர், காலனி, முத்துவாஞ்சேரி, குஞ்சுவெளி, குணமங்கலம் காலனி, குணமங்கலம், அறக்கட்டளை, கடம்பூர், கடம்பூர் காலனி, கோவில்சீமை, காலனி, மழவராயநல்லூர், மழவராயநல்லூர் வடக்கு, உடையவர் தீயனூர், அம்பலவர் கட்டளை, முஸ்லிம் தெரு, அம்பலவர் கட்டளை, காங்கேயன்பேட்டை செங்குழி காலனி, பெருமாள் தீயனூர், செங்குழி, விக்கிரமங்கலம், கீழநத்தம், ஆலவாய், அம்பாப்பூர் காலனி ஆகிய கிராமங்களில் அவர் வாக்கு சேகரித்தார்.

 

கட்சியின் வட்டாரத் தலைவர்கள் மா. நடராஜன், வீர. ரவி. மாவட்டப் பொதுச் செயலர் பழனிச்சாமி, திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Sunday, April 3, 2011

அரியலூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப் பாடுபடுவேன்: காங்கிரஸ் வேட்பாளர் வாக்குறுதி

அரியலூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப் பாடுபடுவேன்: காங்கிரஸ் வேட்பாளர் வாக்குறுதி

 

 

அரியலூர், மார்ச் 31: அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க பாடுபடுவேன் என்றார் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பாளை து. அமரமூர்த்தி(படம்). இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதியில் கூறியிருப்பது:

 

அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினராக 2006-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், இந்தத் தொகுதியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளேன். அரியலூரைத் தலைமையிடமாகக் கொண்டு மீண்டும் அரியலூர் மாவட்டம் பெற்றுத் தந்தது, புதிய அரசுப் பொறியியல் கல்லூரி, ரூ. 10 கோடியில் நகரப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழிச் சாலை, அரியலூர் பேருந்து நிலையத்தில் ரூ. 1 கோடியில் புதிய சிமென்ட் தளம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டால், வரும் காலங்களிலும் மேலும் பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றித் தருவேன்.

 

அதன்படி, அரியலூர் மாவட்டத்துக்கு புதிய மருத்துவக் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் இன மாணவிகளுக்கு விடுதி அமைத்துத் தருவேன்.

 

இந்தத் தொகுதியில் விளையும் தானியங்கள் கெடாமல் இருக்க குளிர் சாதன கிடங்கு, கொள்ளிடம் ஆற்றிலும், மருதையாற்றிலும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுப்பேன்.

 

அரியலூர் நகராட்சியில் சிறப்புச் சாலை பணிகள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசு விளையாட்டுப் பள்ளி விடுதி, காந்தி மார்க்கெட் உள் பகுதியில் சிமென்ட் தளம், நெடுஞ்சாலைத் துறை மூலம் பயணியர் விடுதி அமைக்க பாடுபடுவேன். இதுபோல, பொதுமக்கள் நலன் கருதி, சுண்டக்குடியில் மருதையாற்று மேம்பாலம், அரியலூரில் இணை, துணை மருத்துவ இயக்குநர் அலுவலகங்கள், வேளாண் இணை இயக்குநர், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகங்கள் இயங்க உரிய நடவடிக்கை எடுப்பேன். மேலும், அரியலூர் தொகுதியில் அரசுக் கல்வியியல் கல்லூரி அமைக்கவும், தா.பழூர் பகுதியில் அரசுக் கலைக் கல்லூரி தொடங்கவும் நடவடிக்கை எடுப்பேன். திருமழப்பாடியில் ஆரம்ப சுகாதார நிலையம அமைக்கவும், அரியலூர் சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தவும், கீழப்பழூரில் தொழில்பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர்.

Thursday, March 31, 2011

அண்ணன் அதிகபடியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்

அரியலூர் மாவட்டத்தில், அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் என மூன்று சட்டசபை தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்பில் தற்போது அரியலூர், ஜெயங்கொண்டம் என இரண்டு சட்டசபை தொகுதி மட்டுமே உள்ளன.

 

 

அரியலூர்: 1967 முதல் 2006ம் ஆண்டு வரை நடந்த 10 சட்டசபை பொது தேர்தல்களில், அரியலூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க., நான்கு முறையும், அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு அரியலூர் சட்டசபை தொகுதியில் வன்னியர் 30 சதவீதம், உடையார் மற்றும் மூப்பனார் தலா 20 சதவீதம், தலித் 10 சதவீதம், யாதவர் உள்ளிட்ட இதர சமூகத்தினர் 10 சதவீதம் என்ற நிலையில் ஓட்டு வங்கி உள்ளது.

 

 

அரியலூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில், மூப்பனார் சமூகத்தைச் சேர்ந்த பாளை அமரமூர்த்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். "சிட்டிங்' எம்.எல்.ஏ.,வான பாளை அமரமூர்த்திக்கு ஆதரவாக, தி.மு.க., - பா.ம.க., - வி.சி., உள்ளிட்ட கட்சிகள் களம் இறங்கியுள்ளன. அ.தி.மு.க., சார்பில், கட்சியின் மாவட்ட இணைச் செயலரும், உடையார் சமூகத்தைச் சேர்ந்தவருமான, துரை மணிவேல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்திய ஜனநாயகக் கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கர், காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர் பன்னீர்செல்வம் போட்டியிடுகின்றனர்.

 

 

அ.தி.மு.க., வேட்பாளர் துரை மணிவேல், தொகுதிக்கு புதுமுகம் என்பதால், அ.தி.மு.க.,வினர் கோஷ்டி பூசலை மறந்து செயல்படுகின்றனர். அரியலூர் தொகுதியில் 10 சதவீதம் ஓட்டு வங்கியுள்ள தே.மு.தி.க., ஆதரவு அ.தி.மு.க., வேட்பாளருக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அ.தி.மு.க., வெற்றி பெற்றால் அரியலூர் மாவட்டம் பறிபோவது உட்பட பல்வேறு இழப்பு ஏற்படுமோ என்ற பயம், மக்கள் மத்தியில் தற்போதும் நிலவுகிறது.

 

 

தி.மு.க., ஆட்சியில் அரியலூர் பகுதியில் செய்யப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணி, மக்கள் விருப்பத்துக்கேற்ப மீண்டும் "அரியலூர் மாவட்டம்' உருவாக்கப்பட்டது. தி.மு.க., - பா.ம.க., - வி.சி., கூட்டணி கட்சிகளின் ஆதரவு போன்ற சாதகமான அம்சங்கள், அரியலூர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு கூடுதல் பலம்.

 

 

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம், வரதராஜன் பேட்டை பேரூராட்சிகள், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியங்கள், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு சில வருவாய் கிராமங்களைக் கொண்ட ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் வன்னியர் 55 சதவீதம், தலித் 20 சதவீதம், முதலியார் 10 சதவீதம், வெள்ளாளர், யாதவர் உள்ளிட்ட இதர சமூகத்தினர் 15 சதவீதம் பேர் உள்ளனர்.

 

 

தற்போதைய தேர்தலில், பா.ம.க., சார்பில், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குரு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க., காங்., வி.சி., உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர், குரு வெற்றிக்காக முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர். அ.தி.மு.க., சார்பில் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலரும், அரியலூர் சட்டசபைத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மூப்பனார் சமூகத்தைச் சேர்ந்தவருமான இளவழகன், வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்திய ஜனநாயகக் கட்சியும் தன் பங்குக்கு, ராமச்சந்திரன் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

 

 

கடந்த சட்டசபை தேர்தலில் தனக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கு காரணமான அம்சங்களை கண்டறிந்து, அவற்றை தவிர்க்கும் வகையில், முதலியார் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூக மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், காடுவெட்டி குரு செயல்படுகிறார்.

 

 

அ.தி.மு.க.,வை பொறுத்தவரை கட்சி செல்வாக்கும், பணபலமும் மிக்க இளவழகன், ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்கு வேட்பாளர் என்றாலும், சட்டசபைத் தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில், ஜாதி பலமும் முக்கிய காரணியாக அமையும் என்பது, அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., வெற்றி பெறுவது, கூட்டணி கட்சியினர் செயல்பாட்டில் தான் உள்ளது.

 

 

முக்கிய தொழில் : விவசாயம், நெசவு

 

 

நீண்டகால கோரிக்கைகள் : கொள்ளிடத்தில் தடுப்பணை, முந்திரி தொழிற்சாலை, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்.

 

NANDRI WWW.DINAMALAR.COM

 

அரியலூர் தொகுதியில் அசைக்கமுடியாத மாவீரன் அண்ணன் உயர்திரு பாளை அமரமூர்த்தி. நீங்கள் அதரவாக எழுதினாலும் எழுதவிட்டாலும் முடிவு இதுதான். அண்ணன் அதிகபடியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். அன்புடன் பளையர்தொண்டன்

Tuesday, March 29, 2011

உங்களுடைய பொன்னான வாக்குகளை கை சின்னத்தில் அளிக்க அன்புடன் வேண்டுகிறோம்

 

Saturday, March 26, 2011

காங்கிரஸ் வேட்பாளர் பாளை.அமரமூர்த்தி கூட்டணி கட்சியினருடன் வந்து வேட்பு மனுத்தாக்கல்

அரியலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பாளை.அமரமூர்த்தி தனது வேட்புமனுவை கூட்டணி கட்சியுடனருடன் வந்து ஆர்.டி.ஓ. அலு வலகத்தில் தேர்தல் அலுவலர் ஸ்ரீதரனிடம் தாக்கல் செய்தார்.இவர் தனது சொத்துமதிப்பு ரூ.27 லட்சத்து 35 ஆயிரத்து 369 என்று கூறியுள்ளார்.

 

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் பாளை. அமரமூர்த்தி நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக கூட்டணி கட்சிப் பொறுப்பாளர்களான தி.மு.க. மாவட்டச் செயலாளர் சிவசங்கர், பா.ம.க. மாநில துணைப்பொதுச் செயலாளர் பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சிப் பொறுப் பாளர்களுடன் ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் எதிரேயுள்ள காமராஜர், பெரியார், அம்பேத்கார், அண்ணா சிலைகளுக்கு மாலையணிவித்தார்.

 

பின்னர் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து அரியலூர் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் பாளை.அமரமூர்த்தி, தேர்தல் அதிகாரி ஸ்ரீதரனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சியின் மாற்று வேட்பாள ராக பாளை.அமரமூர்த்தியின் மனைவி குமுதவல்லி மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைச் செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான பழனிச்சாமி ஆகியோர் தஙகளது வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் ஸ்ரீதரனிடம் தாக்கல் செய்தனர்.

 

வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள பாளை.அமரமூர்த்தி தனது வேட்புமனுவில். அசையும் சொத்துக்களின் மதிப்பாக ரூ. 24லட்சத்து 13ஆயிரத்து 369&ம், அசையா சொத்துக்க ளின் மதிப்பாக ரூ. 3லட்சத்து 22ஆயிரம் மற்றும் கடன் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் தன் மீது வழக்குகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Wednesday, March 23, 2011

தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? யார்?

அரியலூர் பாளை தி அமரமூர்த்தி

தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? யார்?

புதுடில்லி : நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் மேலிடம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை தி.மு.க., கூட்டணியில் இருந்து சந்திக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கியது தி.மு.க., காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவர். வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு :

1
மயிலாப்பூர்- ஜெயந்தி தங்கபாலு
,
1
திருத்தணி - சதாசிவலிங்கம்
,
3
ஆவடி - தாமோதரன்
,
4
ஸ்ரீபெரும்புதூர் - யசோதா
,
5
ஆலந்தூர் - காயத்ரி தேவி
,
6
டி.நகர் - செல்லக்குமார்
,
7
மதுராந்தகம் ஜெயக்குமார்,

8
சோளிங்கர்- அருள் அன்பரசு,
9
ராயபுரம் - மனோ
,
10
ஆம்பூர் - விஜய் இளஞ்செழியன்
,
11
கிருஷ்ணகிரி- ஹசீனா சையத்
,
12
ஆத்தூர்- அர்த்தநாரி
,
13
செங்கம்- செல்வப்பெருந்தகை
,
14
ஓசூர்-கோபிநாத்
,
15
கலசப்பாக்கம்-விஜயக்குமார்
,
16
திரு.வி.க., நகர் - நடேசன்
,
17
வேலூர் - ஞானசேகரன்
,
18
ஈரோடு ( மேற்கு) - யுவராஜ்
,
19
சேலம் (வடக்கு)- ஜெய் பிரகாஷ்
,
20
மொடக்குறிச்சி - பழனிச்சாமி
,
21
உதகை - கணேஷ்
,
22
தொண்டாமுத்தூர் - கந்தசாமி
,
23
வால்பாறை- கோவை தங்கம்
,
24
கரூர்- ஜோதிமணி
,
25
மணப்பாறை- டாக்டர் சுப. சோமு
,
26
ரிஷிவந்தியம்- சிவராஜ்
,
27
திருச்சங்கோடு - சுந்தரம்
,
28
முசிறி - ராஜசேகரன்
,
29
விருத்தாச்சலம் - நீதி ராஜன்
,
30
திருத்துறை பூண்டி - செல்லத்துரை
,
31
மயிலாடுதுறை- ராஜ்குமார்
,
32
காரைக்குடி - கே.ஆர். ராமசாமி
,
33
செய்யார் - விஷ்ணு பிரசாத்
,
34
தொண்டாமுத்தூர் - கந்தசாமி
,
35
வேடசந்தூர் - தண்டபாணி
,
36
அரியலூர் - பாளை தி அமரமூர்த்தி
,
37
பட்டுக்கோட்டை - என்.ஆர்.ரங்கராஜன்
,
38
திருமயம் - ராமசுப்புராம்
,
39
மதுரை (வடக்கு) - ராஜேந்திரன்

40
திருப்பரங்குன்றம்- சி.ஆர். சுந்தர்ராஜன்,
41
விளாத்திகுளம்- பெருமாள் சாமி
,
42
விருதுநகர் - நவீன் ஆம்ஸ்ட்ராங்
,
43
நாங்குநேரி - வசந்தகுமார்
,
44
ராதாபுரம் - வேல்துரை
,
45
மதுரை தெற்கு - வரதராஜன்
,
46
சிங்காநல்லூர் - மயூரா ஜெயக்குமார்
,
47
திருத்துறைபூண்டி - செல்லத்துரை
,
48
பரமக்குடி - ராம்பிரபு
,
49
கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்
,
50
வாசுதேவநல்லூர் - கணேசன்
,
51
குளச்சல் - ராபர்ட் ரூப்ஸ்
,
52
பேராவூரணி -கே.மகேந்திரன்

53
சிவகங்கை - வி.ராஜசேகரன்
54
கா‌ங்கேயம் - விடியல் எஸ் சேகர்
55
நிலக்கோட்டை -ராஜாங்கம்
56,.
பாபநாசம் - ராம்குமார்
57
ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி
58 .
கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்
59.
விளவங்கோடு - விஜய தரணி
60 .
அறந்தாங்கி - திருநாவுக்கரசர். பூந்தமல்லி, ராமநாதபுரம், திருப்பூர் தெற்கு ஆகிய 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.
மேலும் அரசியல் செய்திகள்:

Thursday, March 17, 2011

திருமழபாடியில் நந்தியெம்பெருமான் திருமணம்

திருமழபாடியில் நந்தியெம்பெருமான் திருமணம்

 

அரியலூர்: திருமழபாடியில் நந்தியெம்பெருமானுக்கு கோலாகல திருமணம் நடந்தது.ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம், ஸ்ரீ சீதா-ராமர் திருமணம் உள்பட பல தெய்வ திருமணங்களை போல உலகெங்கும் உள்ள சிவாலயங்களில், சிவபெருமானுக்கு காவலனாகவும், தோழனாகவும் விளங்கும் நந்தியெம்பெருமானுக்கு, அரியலூர் மாவட்டம், திருமழபாடி கொள்ளிடக்கரையில் உள்ள வைத்தியநாதஸ்வாமி கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரத்தன்று திருமண உற்சவம் நடக்கிறது.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள அந்தணர் குறிச்சி கிராமத்தில் வயலில் உழுத போது கிடைக்கப்பெற்றவர் நந்தியெம்பெருமான். தொடர்ந்து திருவையாறு ஐயாரப்பர் கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டு, அங்கிருந்து அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாரப்பருடன் கடந்த 15ம் தேதி காலையில், பெண் வீடான திருமழபாடிக்கு புறப்பட்ட நந்தியெம்பெருமான், வெள்ளி தலைப்பாகையுடன் குதிரை வாகனத்தில் அமர்ந்து, திருநெய்தானம், கடுவெளிப்பனையூர், வைத்தியநாதன் பேட்டை வழியாக வந்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கினார். அதே நேரத்தில் திருமழபாடியிலிருந்து சுந்தராம்பிகை உடனமர் வைத்தியநாதஸ்வாமி, கண்ணாடி பல்லக்கில் சென்று சம்பந்திகளையும், மணமகனையும் வரவேற்றனர்.நேற்று முன்தினம் இரவு திருமழபாடி கோயில் வளாகத்தில் மனிதகுல சம்பிரதாயப்படி திருமண நிகழ்ச்சி துவங்கியது. நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பிறகு சீர்வரிசையுடன், கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண மேடைக்கு, மணப்பெண் அழைத்து வரப்பட்டார்.

 

வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் புதல்வியுமான சுயஸாம்பிகா தேவிக்கும், சிலாத முனிவரின் புதல்வரான நந்தியெம்பெருமானுக்கும், ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை மற்றும் யாக வேள்வியுடன் துவங்கி, மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட திருவையாறு ஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, கோயில் ஸ்தானிகர் வீட்டு பெண் ஜானகி, மணமகளுக்கு நாத்தி முடிச்சு திருமண உற்சவத்தை நிறைவு செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பலரும், நமச்சிவாய வாழ்க, தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என கோஷமிட்டனர். உலகில் வேறு எங்கும் காணமுடியாத விழாவாக, பக்தி சிரத்தையுடன் நடந்த இத்திருமண விழாவில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கோவை ராதாகிருஷ்ணன், அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி, ஆர்.டி.ஓ., ஸ்ரீதரன், ஹிந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர்கள் திருச்சி பாலசுப்ரமணியன், தஞ்சாவூர் லெட்சுமணன், உதவி ஆணையர் அரியலூர் சித்ரா, கோயில் நிர்வாக அலுவலர் முருகேஷ், நிர்வாகி முருகேசன், பக்த பிரமுகர் சிவானந்தம் பிள்ளை, வக்கீல் கண்டிராதித்தம் விஸ்வநாதன் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த பொதுமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Friday, February 25, 2011

புதிய ஆரம்ப சுகாதார நிலையம் பொய்யாதநல்லூரில் துவக்க விழா

அரியலூர்: பொய்யாதநல்லூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய துவக்க விழா நடந்தது. அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட, பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள குழந்தைவேல் உடையார் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள, தமிழக அரசின் புதிய ஆரம்ப சுகாதார நிலைய துவக்க விழாவுக்கு, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி தலைமை வகித்தார்.

 

இலுப்பையூர் பஞ்சாயத்து தலைவர் தங்கவேல் வரவேற்றார். புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் பொன்னுசாமி, ஐந்து நபர்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவியும், தமிழக முதல்வரின் பள்ளி சிரார் கண்ணொளி காப்போம் திட்டத்தின்கீழ் 9 மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கி பேசினார்.

 

விழாவில் அரியலூர் பஞ்.,யூனியன் சேர்மன் அருணாபாலு, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பால்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகம், நலக்கல்வியாளர் அண்ணாதுரை, மலேசியா மணி, முத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பஞ்சாயத்து துணை தலைவர் கோவிந்தராசு நன்றி கூறினார். பொய்யாதநல்லூர் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் துவக்க விழாவை முன்னிட்டு, அங்கு சிறப்பு பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது

Thursday, February 24, 2011

New PHCs brace up health service

Setting vision:Collector T.K. Ponnusamy giving away the spectacle to a student at the inaguration of the primary health center at Elakurichi village on Thursday. Palai D. Amaramoorthy, MLA, is in the picture

ARIYALUR: Four new primary health centres (PHCs) started functioning in Ariyalur district from Thursday.

T. K. Ponnusamy, District Collector, inaugurated the new PHC in Elakurichi village at a function held today. Poyyathanallur, Vananthiraiyandipattinam and Maruthur are the other villages where PHCs started functioning today. Mr. Ponnusamy said the district at present accounted for six PHCs and 30 additional PHCs, including three upgraded PHCs. The government, on the plea of the district administration, has sanctioned four more PHCs to the district.

A sum of Rs.22 lakh was allocated for the construction of buildings for each of the eight new PHCs sanctioned to the district. The construction works of all these PHCs are in progress. The government also earmarked Rs.22 lakh for the construction of building for another PHC, which was not having its own premises.

Referring to the initiative taken by the government for medical facilities in rural areas, Mr. Ponnusamy said mobile medical units have been pressed into service to treat the villagers. They have treated over one lakh people.

Over 240 medical camps have been conducted under the varumon kappom scheme in the district so far and about 77,000 people were identified for having complications and referred for further treatment. A sum of Rs.8.19 crore was spent for treating 3,350 people under the Kalaignar Health Insurance Scheme in the district, he added.

The Collector distributed assistance under the Dr. Muthulakshmi Reddy Maternity Assistance Scheme to five women and also spectacles to ten school students.

Later, the Collector inaugurated the veterinary branch clinic in Vadugapalayam village.

He gave away loans of Rs.20,000 each provided by Bank of India for the purchase of milch animals to 20 beneficiaries on the occasion.

Palai D. Amaramoorthy, MLA, presided over the function. Mohan, deputy director of health; S. R. M. Kumar, chairman, Tirumanoor panchayat union and others spoke.

Thanks to www.thehindu.com

 

Tuesday, February 22, 2011

புதியஆரம்ப சுகாதார நிலையம் பொய்யாதநல்லூரில் இன்று திறப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூரில் இன்று புதிய ஆரம்ப சுகாதார நிலைய திறப்புவிழா நடக்கிறது. அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பொய்யாதநல்லூர் குழந்தைவேலு உடையார் இல்லத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலைய திறப்புவிழா இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு, அரியலூர் மாவட்ட கலெக்டர் பொன்னுசாமி தலைமை வகித்து, புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து பேசுகிறார்.

 

பஞ்சாயத்து தலைவர் தங்கவேல் உடையார் வரவேற்று பேசுகிறார். எம்.பி.,திருமாவளவன், எம்.எல்.ஏ.,க்கள் பாளை அமரமூர்த்தி, சிவசங்கர், டி.ஆர்.ஓ., பிச்சை, முன்னாள் எம்.எல்.ஏ., அரியலூர் ஆறுமுகம், நலப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மோகன், அரியலூர் பஞ்.,யூனியன் சேர்மன் அருணாபாலு, துணை தலைவர் சந்திரா ஜோதிவேல், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஜோதிலெட்சுமி பவுன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இலுப்பையூர் பஞ்சாயத்துத் தலைவர் கோவிந்தராசு நன்றி கூறுகிறார்.

நூல் வெளியீட்டு விழா அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி பங்கேற்பு

புதுச்சேரி : பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத் தலைவர் சீனிவாசன் பற்றிய முன்னேறு முன்னேற்று என்ற நூலை, புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் வெளியிட்டார். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத் தலைவரும், தொழிலதிபருமான சீனிவாசன் பற்றி, முன்னேறு முன்னேற்று என்ற நூலை எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ் எழுதி உள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா, தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நேற்று நடந்தது. தனலட்சுமி கல்விக்குழும செயலாளர் நீல்ராஜ் வரவேற்றார். புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் தலைமை தாங்கி நூலை வெளியிட, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பெற்றுக் கொண்டார்.

 

மணிமேகலை பிரசுரம் இயக்குனர் லேனா தமிழ்வாணன், எழுத்தாளர் மோகன்தாஸ், புதுக்கோட்டை முத்து சீனிவாசன், ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்ரமணியன், திருச்சி சிவானி கல்வி நிறுவனத் தலைவர் செல்வராஜ், அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்னாள் சேர்மன் சுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

 

விழாவில் முதல்வர் வைத்திலிங்கம் பேசுகையில், பெரம்பலூர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் படிப்புகள் பயில மிகப் பெரிய கல்வி நிறுவனத்தை சீனிவாசன் துவக்கி சிறப்பாக நடத்தி வருகிறார். வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்கள், தோல்வியைக் கண்டு துவண்டுபோனவர்கள் இந்த நூலைப் படிக்க வேண்டும்.

 

அப்படி படித்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என கூறினார்.தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கதிரவன், இயக்குனர்கள் மணி, பூபதி, நிர்வாக அலுவலர் ராஜசேகர், திருச்சி அபிராமி ஓட்டல் உரிமையாளர் முத்துக்கிருஷ்ணன், திருச்சி சரக டி.ஐ.ஜி., மவுரியா, பெரம்பலூர் எஸ்.பி., ரூபேஷ்குமார்மீனா, பெரம்பலூர் நகராட்சி தலைவர் ராஜா உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்

பகுதி நேர அங்காடி திறப்பு

அரியலூர், பிப். 21: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கருப்பில்லாக்கட்டளை ஊராட்சியிலுள்ள வண்ணாரப்பேட்டை கிராமத்தில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

 

விழாவுக்கு தலைமைவகித்து அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி பகுதி நேர அங்காடியை திறந்துவைத்துப் பேசியது:

 

இதுநாள் வரை கல்லக்குடி கிராமத்துக்குச் சென்று ரேஷன் பொருள்களை பெற்று வந்த மக்களின் சுமையை குறைக்கும் வகையில், இப்போது வண்ணாரப்பேட்டையில் பகுதி நேர அங்காடி திறக்கப்பட்டுள்ளது.

 

மக்களின் தேவையை அறிந்து திட்டங்களைத் தீட்டி, அதை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அரசுக்கு மக்கள் துணையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.  

 

விழாவுக்கு கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் ரவிக்குமார், சார்பதிவாளர் சிவகுமார், கள அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் ஒன்றிய திமுக செயலர் ஜோதிவேல், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அறிவழகன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் மா. நடராஜன், ஊராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன், கோவிலூர் ஊராட்சித் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

 

விழாவில் பொது விநியோகத் திட்ட சார்பதிவாளர் கணேசன், வட்ட வழங்கல் அலுவலர் கதிரவன், சிதம்பரம் மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப. சுந்தரசோழன், அரியலூர் சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

முன்னதாக ஊராட்சித் தலைவர் ஜயலட்சுமி விசுவநாதன் வரவேற்றார். பொய்யூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிச் செயலர் காமராஜ் நன்றி கூறினார்.

Saturday, February 19, 2011

திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் மாசிமகத் தேரோட்டம்

திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் மாசிமகத் தேரோட்டம்

 

அரியலூர், பிப். 17: அரியலூர் மாவட்டம், திருமழப்பாடி அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோயில் மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

 

கொள்ளிடத்தின் வடகரையில் புருஷாமிருக மகரிஷியால் பூஜிக்கப் பெற்றதும்,திருமால், இந்திரன் ஆகியோரால் வழிபடப் பெற்றதும், நந்தியெம்பெருமாள் சுயசாம்பிகை தேவியாருடன் திருமணம் கொண்டருளியதும் திருமழப்பாடி அருள்மிகு  வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில்தான்.

 

இந்தத் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 9 ஆம் தேதி  தொடங்கியது.

 

இதைத் தொடர்ந்து, அருள்மிகு வைத்தியநாத சுவாமியும், சுந்தராம்பிகை  அம்மனும், ஆதிசேஷம், பூதம், கைலாசம், இடபம், யானை வாகனங்களில்  சுவாமி, அம்பாள் ஒவ்வொரு நாளும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

 

திருவிழாவின் ஏழாம் திருநாளான பிப்ரவரி 15 ஆம் தேதி திருக்கல்யாண உத்சவமும், எட்டாம் திருநாளான பிப்ரவரி 16 ஆம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா வருதலும் நடைபெற்றன.

 

மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது. இதையொட்டி காலையில் கருவறையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்ட பின்னர், காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். முற்பகல் 11.45 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. நான்கு தேரோடும் வீதிகளின் வழியாக வலம் வந்த திருத்தேர் இரவு நிலைக்கு வந்தடைந்தது.

 

தேரோட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி, திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் மா. நடராஜன், திருமழப்பாடி ஊராட்சித் தலைவர் கர்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மாசிமகப் பெருவிழாவில் வெள்ளிக்கிழமை திருமஞ்சனமும், கொடியிறக்குதலும், பிப். 19 ஆம் தேதி விடையாற்றி உத்சவமும் நடைபெறும்.

 

மாசிமகப் பெருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா. சந்திரசேகரன், நிர்வாக அலுவலர் (கூடுதல் பொறுப்பு) தி. முருகேஷ் மற்றும் கிராமப் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Sunday, February 13, 2011

பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட அரியலூர் எம்.எல்.ஏ., கோரிக்கை

அரியலூர்: "அரியலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களை காப்பாற்ற, மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்,'என அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி, சென்னையில் முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவில் உள்ளதாவது:

 

அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டசபை தொகுதியில், திருச்சி ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் மூலம்,  30 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களை கொண்டதாகும். இந்தாண்டு பாசனத்துக்காக புள்ளம்பாடி வாய்க்காலில் தாமதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழையால் விவசாய பயிர்கள் பெருமளவு அழிந்து விட்டது. அதையடுத்து மீண்டும் நடவு செய்யப்பட்டுள்ளது. காலம் கடந்து நடவு செய்யப்பட்டதால், பாசனத்துக்கான தண்ணீர் தேவைக்கான காலத்தையும் நீட்டிப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

நெல் பயிர்கள் தொண்டை கதிராக இருப்பதாலும், விவசாயத்துக்கான மின்சாரம் நாளொன்றுக்கு 3 மணி நேரம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதனால், மார்ச் மாதம் வரை தண்ணீர் கொடுத்தால் தான், விவசாயிகள் நடவு செய்த பயிரை பாதிப்பு இல்லாமல் அறுவடை செய்ய முடியும். மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லையே என, விவசாயிகள் மிகவும் வருந்துகின்றனர்.

 

எனவே, அரியலூர் மாவட்ட நெல் பயிர்களை பாதுகாக்க, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டு, விவசாயிகள் தங்களது வயலில் பயிர் செய்துள்ள வெள்ளாமையை வீட்டுக்கு கொண்டுவந்து சேர்க்க உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.<

Monday, February 7, 2011

ஓட்டக்கோவில் கிராமத்தில் கால்நடை மருத்துவ கிளை நிலையம் திறப்புவிழா நடந்தது.

அரியலூர்: ஓட்டக்கோவில் கிராமத்தில் கால்நடை மருத்துவ கிளை நிலையம் திறப்புவிழா நடந்தது.

 

அரியலூர் அருகே, ஓட்டக்கோவில் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கால்நடை கிளை மருத்துவ நிலையம் திறப்பு விழாவுக்கு அரியலூர் கால்நடை பராமறிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர் மோகனரங்கன் தலைமை வகித்தார். ஓட்டக்கோவில் பஞ்சாயத்த தலைவி ஜோதி மணிவேல் வரவேற்றார்.

 

புதிய கால்நடை மருத்துவ கிளை நிலையத்தை, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றியதுடன்,சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளை வழங்கினார். துவக்கவிழாவில் திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், காங்கிரஸ் வட்டார தலைவர் கோவிந்தராஜ், டால்மியா சிமெண்ட்ஸ் ஆல்வின், நேரு யுவகேந்திரா கொளஞ்சியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுண்டக்குடி கால்நடை மருந்த டாக்டர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

 

ஓட்டக்கோவில் கிராமத்தில் கால்நடை மருத்துவ கிளை நிலையம் திறப்பு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இலவச கால்நடை மருத்துவ முகாமில், கால்நடைகளுக்கு ஏற்படும் சப்பை நோய், துள்ளுமாறி நோய் ஆகியவற்றுக்கான 750 கால்நடைகளுக்கு தடுப்பூசியும், 387 கோழிகளுக்கு கோழி கழிச்சல் நோய்க்கான தடுப்பூசியும் போடப்பட்டது. மேலும் 1,980 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கமும், 32 கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கமும், 42 கால்நடைகளுக்கு சினை பரிசோதனையும், 6 கால்நடைகளுக்கு மலடு நீக்கமும் செய்யப்பட்டது

 

கால்நடை மருத்துவ முகாமில் டாக்டர்கள் பாஸ்கரன், சேகர், குமார், ரெங்கசாமி, கார்த்திகேயன், ரவிச்சந்திரன், சுப்ரமணியன், புகழேந்தி, ப்ரியா, கால்நடை ஆய்வாளர்கள் துரை, ஆறுமுகம், கால்நடை பராமறிப்பு உதவியாளர்கள் நாகராஜன், செந்துறை ராமலிங்கம், வேப்பூர் ராமலிங்கம், துரைசாமி, வரதராஜன், மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மகளிர்சுய உதவி குழு மூலம் பெண்கள் சொந்த காலில் நிற்கும் மன உறுதியை பெற்று உள்ளனர்;

அரியலூர் விழாவில் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

 

அரியலூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் திறப்பு விழா, பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழா, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கும் விழா, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரியலூர் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

 

விழாவுக்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கினார். மத்திய மந்திரி து.நெப்போலியன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் கலெக்டர் பொன்னுசாமி வரவேற்று பேசினார்.

 

துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

 

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 1500 பேருக்கு வீடுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விழாவிலே 1512 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல்நிதி வழங்கப்பட இருக்கிறது. கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டு நாளை முதல் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. கடந்த தி.மு.க.ஆட்சியில் 145 இடங்களில் சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டன.

 

2006-ல் மீண்டும் கழக அரசு அமைந்ததும் முதல்வேலையாக சமத்துவபுரங்களை பராமரிப்பதற்காக ரூ.14? கோடி நிதியை முதல்-அமைச்சர் கலைஞர் ஒதுக்கினார். 2008-2009-ல் 29 சமத்துவபுரங்கள் கட்டி முடித்து திறக்கப்பட்டன. 2009-2010-ல் 30 சமத்துவபுரங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு அவற்றிலே ஒன்றை இன்று காலை சேலம் ஆத்தூரில் திறந்து வைத்தேன்.

 

இப்போது திறக்கப்பட்டிருப்பது 21-வது சமத்துவபுரம் இன்னும் மீதி உள்ள 9 சமத்துவபுரங்களும் இம்மாத இறுதிக்குள் திறக்கப்படும். மீதி உள்ள 36-ம் விரைவாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மகளிர் சுயஉதவி குழு மாபெரும் இயக்கமாக கம்பீர நடைபோடுகிறது. இந்த திட்டம் மூலம் பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க மன உறுதியை பெற்று உள்ளனர்.

 

 இன்று காலையில் நடைபெற்ற விழாவுடன் சேர்த்து ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் இதுவரை 1லட்சத்து 88 ஆயிரத்து 156 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியையும், வங்கிக்கடனையும் வழங்கி இருக்கிறேன். இதனை நான் நின்று கொண்டே வழங்குவதற்காக செலவு செய்தது 122 மணிநேரமாகும். இந்தநேரத்தை நான் செலவு செய்ததாக நினைக்கவில்லை பெருமையாகத்தான் கருதுகிறேன்.

 

அதற்கு காரணம் நிதியை பெற்றுச்செல்லும் பெண்களின் முகத்தில் காண்கிற மகிழ்ச்சி எனது உடலில் ஏற்படும் சோர்வைக்கூட பறந்து போகச்செய்துவிடுகிறது. அந்த அளவிற்கு பெண்கள் இந்த ஆட்சி மீதும், ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிற கலைஞர் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். கலைஞர் 6-வது முறையாக முதல்-அமைச்சர் ஆவதற்கு வருகிற தேர்தலிலும் இந்த ஆதரவு தொடர வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்.

 

இவ்வாறு துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர், ராஜேந்திரன், பாளை.அமரமூர்த்தி, ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள் எம்.பி.சிவசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுமுகம்,அரியலூர் ஒன்றியக்குழு தலைவர் அருணாபாலு,பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித்தலைவர் கொடியரசி துரைசாமி, வாலாஜாபுரம் ஊராட்சிமன்றத்தலைவர் தெய்வ.இளையராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெல்லா நன்றி கூறினார்.