அரியலூர், செப். 19: அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அந்தக் கட்சியினர் திங்கள்கிழமை விருப்ப மனு அளித்தனர்.
இதையொட்டி, அரியலூர் நீதிமன்றம் அருகிலுள்ள கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டத் தலைவரும், சட்டபபேரவை முன்னாள் உறுப்பினருமான பாளை து. அமரமூர்த்தி தலைமை வகித்து, கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றார்.
அரியலூர், ஜயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர் பதவிகள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், பேரூராட்சித் தலைவர், உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளுக்கு கட்சியினர் விருப்ப மனு அளித்தனர்.
நிகழ்ச்சியில் கட்சியின் அரியலூர் நகரத் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீதர், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பழனிச்சாமி, செந்துறை ஒன்றியத் தலைவர் கொளஞ்சிநாதன், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் குருமூர்த்தி, தா.பழூர் வட்டாரத் தலைவர் முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments:
Post a Comment