Pages

Saturday, January 8, 2011

மரணமடைந்த கருப்பையா உடையார் உடலுக்கு, எம்.எல்.ஏ. பாளை அமரமூர்த்தி அஞ்சலி செலுத்தினர்

அரியலூர்: அரியலூர் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கருப்பையா உடையார் மரணமடைந்தார். அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே, கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா உடையார்(80). உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிலேயே மரணமடைந்தார்.

 

காங்கிரஸ் கட்சி வேட்பாளராக 1967 சட்டசபை தேர்தலில், அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பையா உடையாருக்கு மூன்று மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் சந்திரமோகன், தற்போதைய தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக உள்ளார்.

 

மரணமடைந்த கருப்பையா உடையார் உடலுக்கு, எம்.எல்.ஏ.,க்கள் பாளை அமரமூர்த்தி, சிவசங்கர், ராஜேந்திரன், ராஜ்குமார், தொட்டியம் ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் வக்கீல் சின்னப்பா, தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் திருமானூர் தனபால் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

0 comments:

Post a Comment