Pages

Wednesday, February 2, 2011

அரியலூர் மாவட்ட ஆட்சியரகம், சமத்துவபுரத்தை திறந்துவைத்தார் ஸ்டாலின்

அரியலூர் மாவட்ட ஆட்சியரகம், சமத்துவபுரத்தை திறந்துவைத்தார் ஸ்டாலின்

Last Updated :

 

அரியலூர், பிப். 1: அரியலூர் மாவட்ட புதிய ஆட்சியரகத்தை தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து, நலத் திட்ட உதவிகளை  வழங்கினார்.

 

அரியலூர் - ஜயங்கொண்டம் சாலையில் புறவழிச்சாலை அருகே ரூ.10.29 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகப் புதிய கட்டடம், தேளூரில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் ஆகியவற்றை திறந்துவைத்த  தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ. 43.40 கோடியில் கட்டப்பட்டுள்ள  286 புதிய கட்டடங்களைத் திறந்துவைத்தும், ரூ. 45.15 மதிப்பில் கட்டப்பட உள்ள 287 கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 9415 பயனாளிகளுக்கு ரூ. 35.32 கோடியில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார்.

 

விழாவுக்கு, மாநில வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் இ.  பெரியசாமி தலைமை வகித்தார். மத்திய இணை அமைச்சர் து. நெப்போலியன், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் தொல். திருமாவளவன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

 

விழாவில் சட்டப்பேரவை உறுóப்பினர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், கே.  ராஜேந்திரன், பாளை து. அமரமூர்த்தி, மாவட்ட ஊராட்சித் தலைவி கொடியரசி துரைசாமி, ஒன்றியக் குழுத் தலைவர் அருணா பாலு, வாலாஜாநகரம் ஊராட்சித் தலைவர் தெய்வ. இளையராசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

 

இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரவிக்குமார், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், துரை. சந்திரசேகரன், மகேஷ் கிருஷ்ணசாமி, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ். சிவசுப்பிரமணியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அரியலூர் த. ஆறுமுகம், ஒன்றிய திமுக செயலர்கள் அரியலூர் பி. ஜோதிவேல், செந்துறை மு. ஞானமூர்த்தி, அரியலூர் நகர திமுக செயலர் இரா. முருகேசன், மாவட்ட திமுக துணைச் செயலர் எஸ்.வி. சாந்தி, திமுக வழக்குரைஞர் த.ஆ.  கதிரவன், அரியலூர் நகர்மன்றத் தலைவி விஜயலட்சுமி செல்வராஜன், துணைத் தலைவர் வெ. சுப்பிரமணியன், செயல் அலுவலர் (பொறுப்பு) இரா. மோகன், நகராட்சி உறுப்பினர்கள் கா. அமுதலட்சுமி, த. ராமூர்த்தி, ஐ.பி. மணிவண்ணன், இரா. ராமு, எம்.எஸ். சந்திரசேகர், ஆ. தமிழரசன், ஆ. குணா, ஏ.பி.எஸ். பழனிச்சாமி, கோ. தவமணி, பா. சாவித்திரி, நா. பாபு, மு. ராஜா, விடுதலைச்  சிறுத்தைகள் கட்சியின் மாநில வணிகர் சங்கச் செயலர் நா. செல்வராசு, சென்னை ஜீவன் கன்ஸ்ட்ரக்ஷன் கே.எம். காளிமுத்து, ஜி. ஸ்ரீகாந்த், மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

முன்னதாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி வரவேற்றுப் பேசினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் ஜெ. பெல்லா நன்றி  கூறினார்.

 

Nandri : www.dinamalar.com

 

 

 

0 comments:

Post a Comment