அரியலூரில் ஜி.கே. வாசன் பிறந்த நாள்
அரியலூர், டிச. 28: மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசனின் பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானமும், அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டி பாக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.ஆர். கணேசன், நகர்மன்றத் துணைத் தலைவர் வி. சுப்பிரமணியன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பழனிச்சாமி, வட்டார காங்கிரஸ் தலைவர் கோவிந்தராஜ், குருவாடி ஊராட்சித் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜி.கே. வாசன் பிறந்த நாள் விழாவுக்கு தலைமை வகித்து, அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பழம், பால், ரொட்டி பாக்கெட்டுகளை சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சிதம்பரம் மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப. சுந்தரசோழன், அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், இளைஞர் காங்கிரûஸச் சேர்ந்த சரவணன், ரமேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் சுரேஷ், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன், வட்டாரத் தலைவர் வீர. ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


0 comments:
Post a Comment