Pages

Wednesday, April 13, 2011

அரியலூர் மாவட்டத்தில் பாளை து. அமரமூர்த்தி வாக்குப் பதிவு

அரியலூர் மாவட்டத்தில் தொல். திருமாவளவன், வேட்பாளர்கள், ஆட்சியர் வாக்குப் பதிவு

 

அரியலூர், ஏப்.13: அரியலூர் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வேட்பாளர்கள், ஆட்சியர் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

 

அரியலூர் வாலாஜாநகரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி முதல் வாக்கைப் பதிவு செய்து வாக்குப் பதிவைத் தொடக்கி வைத்தார்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நஜ்முல் ஹோதா அரியலூர் ஆர்.சி. செயின்ட் மேரீஸ் பள்ளியிலும் வாக்களித்தனர்.

 

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பாளை து. அமரமூர்த்தி தனது சொந்த கிராமமான திருமானூர் ஒன்றியம், பாளையப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், அதிமுக வேட்பாளர் துரை. மணிவேல் இலந்தைக்கூடம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பாஜக வேட்பாளர் பி. அபிராமி கீழக்கொளத்தூர் அரசுப் பள்ளியிலும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சி. பாஸ்கர் தனது சொந்த ஊரான தேளூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார்.

 

இதுபோல, ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் காடுவெட்டி ஜெ. குரு தனது சொந்த ஊரான ஆண்டிமடம் அருகிலுள்ள ப. காடுவெட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், அதிமுக வேட்பாளர் ப. இளவழகன் திருமானூர் ஒன்றியம், அன்னிமங்கலம் பள்ளியிலும், பாஜக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர்.

 

0 comments:

Post a Comment