அரியலூர்: அரியலூர் ராஜீவ்நகரில் பஞ்.,யூனியன் துவக்கப்பள்ளி திறப்பு விழா நடந்தது. அரியலூர் அருகே வாலாஜாநகரம் பஞ்சாயத்துக்குட்பட்ட ராஜீவ் நகருக்கு, தமிழக அரசு சார்பில் நடப்பு கல்வியாண்டில் அறிவிக்கப்பட்ட பஞ்.,யூனியன் துவக்கபள்ளிக்கான தொடக்கவிழா மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் தலைமை வகித்து திறந்து வைத்தார்.
அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி முன்னிலை வகித்தார். விழாவில் சி.இ.ஓ., கார்த்தியாயிணி, மாவட்ட பஞ்.,கவுன்சிலர் ஜோதிலெட்சுமி பவுன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் பாண்டியன், வாலாஜாநகரம் பஞ்சாயத்து தலைவர் தெய்வ இளையராஜன், உதவி தொடக்க கல்வி அலுவலர் கருணாநிதி, பள்ளியின் தலைமை ஆசிரியர் தேத்ரவு ஸ்டெல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 comments:
Post a Comment