Pages

Thursday, August 19, 2010

இலவச கலர் "டிவி' வழங்கும் விழா

அரியலூர்: அரியலூர் அருகே, மேலக்கருப்பூர் பஞ்சாயத்தை சேர்ந்த கருவிடச்சேரி கிராமத்தில் நடந்த, தமிழக அரசின் இலவச கலர் "டிவி' வழங்கும் விழாவுக்கு, டி.ஆர்.ஓ., பிச்சை தலைமை வகித்தார். பஞ்., தலைவி ராதா கிருஷ்ணவேணி பாலசுப்ரமணியன் வரவேற்றார். மேலக்கருப்பூர் பஞ்சாயத்துக்குட்பட்ட 1,381 குடும்பங்களுக்கான தமிழக அரசின் இலவச கலர் "டிவி'க்களை, எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி வழங்கி பேசினார். விழாவில், மண்டல துணை தாசில்தார் கதிரவன், ஆர்.ஐ., கோவிந்ராஜ், திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், மாவட்ட பஞ்., கவுன்சிலர் அறிவழகன், பொய்யூர் இளங்கோவன், மேலக்கருப்பூர் பஞ்சாயத்து துணை தலைவர் மாரியாயி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

0 comments:

Post a Comment