Pages

Thursday, January 20, 2011

அரியலூரில் ஃபிப்., 1ல் புதிய கலெக்டர்ஆஃபீஸ் திறப்பு

அரியலூர்:  அரியலூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை, துணை முதல்வர் ஸ்டாலின் ஃபிப்ரவரி முதல் தேதி திறந்து வைக்கிறார்.கடந்த 2007 நவம்பர் 23ம் தேதி  துவக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்துக்கு, 14 கோடி ரூபாய் செலவில் புதிய கலெக்டர் அலுவலகம்  கட்டும் பணி 2009 செப்டம்பர் 30ம் தேதி துவங்கியது.

 

பணிகள் நிறைவடைந்து திறப்பு விழா ஃபிப்ரவரி முதல் தேதி மாலை 4மணிக்கு அரியலூரில் நடக்கிறது.தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு தலைமை வகிக்கிறார்.

 

அரியலூர் மாவட்ட கலெக்டர் பொன்னுசாமி வரவேற்கிறார். மத்தியமைச்சர் நெப்போலியன் முன்னிலை வகிக்கிறார்.அரியலூர் மாவட்ட புதிய கலெக்டர் ஆஃபீஸ் கட்டிடம், தேளூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரம், அரியலூர் நகராட்சி அலுவலகத்துக்கான கூடுதல் கட்டிடம், சர்க்யூட் ஹவுஸ் உள்ளிட்ட புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்து, பலகோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.எம்.எல்.ஏ.,க்கள் அரியலூர் பாளை அமரமூர்த்தி, ஆண்டிமடம் சிவசங்கர், ஜெயங்கொண்டம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

NANDRI : WWW.DINAMALAR.COM

 

 

0 comments:

Post a Comment