அரியலூர்: அரியலூர் அருகே மஞ்சமேடு கிராமத்தில் ஜி.கே.மூப்பனார் அரங்க மேடை திறப்புவிழா நடந்தது. அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே மஞ்சமேடு கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் திடலில் கட்டப்பட்டுள்ள, ஜி.கே.மூப்பனார் அரங்க மேடை திறப்பு விழாவுக்கு, திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன் தலைமை வகித்தார். மஞ்சமேடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் கீதப்பிரியன் வரவேற்றார்.
அரங்க மேடையை திறந்து வைத்து காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர், எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி பேசினார். விழாவில் திருமானூர் ஒன்றிய கவுன்சிலர் உத்ராபதி, மஞ்சமேடு பஞ்சாயத்து தலைவர் அலமேலு முரளி, துணை தலைவர் சாந்தகுமார், சாத்தமங்கலம் பஞ்சாயத்து தலைவர் ராமையன், காரைப்பாக்கம் கிராம காங்கிரஸ் தலைவர் பிச்சைமணி, கிராம பிரமுகர்கள் மாணிக்கம் மூப்பனார், ஏரக செல்வம், பேராசிரியர் அருணாசலம், போலீஸ் ஏட்டுக்கள் அசோகன், காமராஜ், மார்க்கண்டன், ராஜேந்திரன், குருநாதன், நம்மாழ்வார், கோவிந்தராஜ், சேஷையன், சுப்ரமணியன், கலியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து தஞ்சை சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவின் ஆடல், பாடல், இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மஞ்சமேடு இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்

0 comments:
Post a Comment