Pages

Saturday, January 8, 2011

அரசின் பல்துறை பணி விளக்க முகாம் மற்றும் கண்காட்சி துவக்கவிழா

அரியலூர்: அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், அரசின் பல்துறை பணி விளக்க முகாம் மற்றும் கண்காட்சி துவக்கவிழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.

 

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அன்பழகன் வரவேற்கிறார். அரியலூர் மாவட்ட கலெக்டர் பொன்னுசாமி தலைமை வகித்து, அரசின் பல்துறை விளக்க முகாமை துவக்கி வைத்துப் பேசுகிறார். சிதம்பரம் எம்.பி., திருமாவளவன், எம்.எல்.ஏ.,க்கள் சிவசங்கர், ராஜேந்திரன், பாளை அமரமூர்த்தி முன்னிலை வகிக்கின்றனர்.

 

டி.ஆர்.டி.ஏ., திட்ட இயக்குநர் பெல்லா, சி.இ.ஓ., கார்த்தியாயினி, ஜெயங்கொண்டம் பஞ்., யூனியன் சேர்மன் பரமேஸ்வரி, துணைத் தலைவர் தன சேகர், ஒன்றிய கவுன்சிலர் நீலாவதி பாக்கியராஜ், குழந்தைகள் வளர் ச்சி திட்ட அலுவலர் அன்பரசி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

0 comments:

Post a Comment