Pages

Sunday, January 16, 2011

அரியலூரில் புதிய ஸ்கேன் மைய திறப்பு விழா

அரியலூர்: அரியலூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய, யுனைட்டெடு "சிடி' ஸ்கேன் மைய திறப்பு விழாவுக்கு, எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., அரியலூர் ஆறுமுகம், லால்குடி எம்.எல்.ஏ., சௌந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர். டாக்டர் சங்கர் வரவேற்றார்.

புதிய "சிடி' ஸ்கேன் மையத்தை திறந்து வைத்து அமைச்சர் நேரு பேசியதாவது: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தற்போது, மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 15 ஆண்டுக்கு பிறகு இப்போதயை தி.மு.க., ஆட்சியில், தமிழகம் முழுவதும்100க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும், மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரிகளும்திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதனின் சராசரி இறப்பு வயது 30 லிருந்து 60 ஆக உயர்ந்துள்ளது.

நகர் புறங்களில் நல்ல மருத்துவ வசதி இருந்தாலும், புறநகர் பகுதிகளும் மருத்துவ வசதியில் சிறப்பிடம் பெற்று வருகிறது. எங்களை போன்றவர்களின் அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது இந்த அரியலூர் நகரம் தான்.

தமிழக முதல்வரால் அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, வர்த்தக நகரமான அரி யலூர் தொழில் நகரமாகவும் மாறி பல்வேறு தனியார் சி மெண்ட் ஆலைகள் உதயமாகி உள்ளன. அரியலூர் மேம்பாட்டுக்கு என்னால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், காங்கிரஸ் நகர தலைவர் ஸ்ரீதர், திருமானூர் பஞ்., யூனியன் சேர்மன் நடராஜன், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் வக்கீல் சாந்தி, நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், நகர பொருளாளர் ராஜேந்திரன், வக்கீல் கதிரவன், நகராட்சி கவுன்சிலர்கள் டாக்டர்கள் சிவக்குமார், ராஜேந்திரன், நாகராஜன், செந்தில்நாதன், கண்மணி, அகமது ரஃபி, லயன்ஸ் கிளப் தலைவர் பொன்மணி, வர்த்தகர் சங்க நிர்வாகிகள் பரமசிவம், அமுதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

0 comments:

Post a Comment