அரியலூர்: அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூரில் இன்று புதிய ஆரம்ப சுகாதார நிலைய திறப்புவிழா நடக்கிறது. அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பொய்யாதநல்லூர் குழந்தைவேலு உடையார் இல்லத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலைய திறப்புவிழா இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு, அரியலூர் மாவட்ட கலெக்டர் பொன்னுசாமி தலைமை வகித்து, புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து பேசுகிறார்.
பஞ்சாயத்து தலைவர் தங்கவேல் உடையார் வரவேற்று பேசுகிறார். எம்.பி.,திருமாவளவன், எம்.எல்.ஏ.,க்கள் பாளை அமரமூர்த்தி, சிவசங்கர், டி.ஆர்.ஓ., பிச்சை, முன்னாள் எம்.எல்.ஏ., அரியலூர் ஆறுமுகம், நலப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மோகன், அரியலூர் பஞ்.,யூனியன் சேர்மன் அருணாபாலு, துணை தலைவர் சந்திரா ஜோதிவேல், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஜோதிலெட்சுமி பவுன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இலுப்பையூர் பஞ்சாயத்துத் தலைவர் கோவிந்தராசு நன்றி கூறுகிறார்.

0 comments:
Post a Comment